June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

மின் இணைப்புக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது

1 min read

Business inspector arrested for taking bribe of Rs.2 thousand for electricity connection

24.3.2023
வீட்டு மின் இணைப்புக்கு ரூ. இரண்டாயிரம் லஞ்சம் பெற்ற வணிக ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.

லஞ்சம்

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை மின் உதவி பொறியாளர் அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வந்தனர் கணபதி (வயது 50) .அவரை கேசவராஜகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷ் என்பவர் சந்தித்து புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க மனு செய்துள்ளார்.
புதிய இணைப்புக்கு லஞ்சம் கேட்பதாக திருவள்ளூரில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழங்கிய ரூ. இரண்டாயிம் ரசாயனம் தடவிய பணத்தை பிரகாஷ் பொதட்டூர்பேட்டை அலுவலகத்தில் இருந்த வணிக ஆய்வாளர் கணபதியிடம் நேற்று வழங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.