பழையக்குற்றாலம் வனப்பகுதியில் அனுமதியின்றி படப்பிடிப்பு நடப்பதா புகார்
1 min read
omplaint that shooting is going on without permission in Old Kutalam forest area
1.4.2023
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் வனப்பகுதியில் உரிய அனுமதியின்றி திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் சட்டவிதிகளை மீறி நடைபெறும் திரைப்பட படப்பிடிப்பை தடுத்து நிறுத்தக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதன்மை வனபாதுகாவலர், முண்டன்துறை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் ஆகியோருக்கு கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினரும் சமூக ஆர்வலருமான இராம உதயசூரியன் புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
படப்பிடிப்பு
தென்காசி மாவட்டம் , ஆயிரப்பேரி கிராமத்தில் அமைந்துள்ளளது பழைய குற்றாலம் . இங்கு மலையிலிருந்து விழும் அருவி நீரில் மக்கள் தினமும் நீராடி வருகின்றனர் . இந்த அருவியில் விழும் தண்ணீர் மூலம் விவசாயமும் நடைபெற்று வருகிறது . வருகிறது . இதில் செங்குளம் கால்வாய் மூலம் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு எங்கள் பகுதியிலுள்ள சுமார் பதினைந்து குளங்கள் பாசனவசதி பெற்று வருகிறது .
இதில் மத்தளம்பாறை கிராமத்தில் உள்ள உப்பினாங்குளம் அருகில் உள்ள பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது . இதற்காக இவர்கள் மிக பிரமாண்டமான கோவில் அமைப்பு கொண்ட செட் ஒன்றை உருவாக்கியும் அதன் முன்பு ஓலை குடிசைகளினால் சிறிய கிராமம் போன்ற தோற்றத்தையும் உருவாக்கி உள்ளனர் . தீயிடும் காட்சிகள் எல்லாம் இதில் இடம் பெறுகிறது
இவர்கள் படப்பிடிப்பு நடத்தும் காப்புகாட்டுப்பகுதியிலிருந்து 10 கி.மீ வரை வனப்பகுதியாகும் . இங்கு படப்பிடிப்பு நடந்த தடையில்லா சான்று பெறாமல் கடந்த ஒருமாதத்திற்கு மேலாக சட்டவிரோதமாக படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள் . இந்த படப்பிடிப்பிற்காக வனத்துறையின் உள்ள வெளிமண்டல பாதுகாப்பு வனத்துறையிடம் பெறவேண்டிய தடையில்லா சான்றிதழ் பெறாமல் மிகவும் அதிக அளவிலான ஒளியை உருவாக்கும் . ஹைமாஸ் மின் மிகவும் விளக்குகளை பயன்படுத்து கின்றனர் . இதனால் மிளா , மான் , யானை , புலி , காட்டு முயல் போன்ற மிருகங்களுக்கும் பெரும் இடையூறு செய்து வருகின்றனர்
இதனால் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து அச்சத்துடன் வெளியேறி மலையடிவாரத்தில் உள்ள தனியார் நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும் , உயிருக்கு அச்சம் விளைவித்தும் வருகின்றன .
யானைகள்
மேலும் முக்கியமாக இது யானைகளின் வழித்தடம் என்பதால் கீழே குடிநீருக்காகவும் , பசுமை உணவுகளுக்காகவும் இறங்கி வரும் யானைகள் மீண்டும் மலைக்கு செல்ல முடியாமல் ஊருக்குள் புகுந்து விடுகின்றன . அப்படி ஒரு யானை 15 நாட்களாக திரவியநகர் , கடுவாக்காடு , தோரணமலை . மத்தளம்பாறை பகுதிகளில் சுற்றிதிரிந்து தென்னை , வாழை போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகிறது . எனவே தாங்கள வன உயிரினங்களுக்கும் , பொது மக்களுக்கும் இடையூறான இடத்தில் வனத்துறையின் வெளிமண்டல பாதுகாப்பு பகுதியில் நடைபெற்று வரும் இந்த திரைப்பட படபிடிப்பை உடனடியாக நிறுத்திடவும் , யானைகள் வழித்தடத்தில் உருவாக்கப்பட்டுள்ள அரங்க அமைப்புகளை உடனடியாக அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க தங்களை பொதுமக்கள் சார்பில் வேண்டுகிறேன் .
இவ்வாறு அவர் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கோரிக்கை மனுவினை தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதன்மை வனப் பாதுகாவலர், ஆகியோருக்கும் அனுப்பி உள்ளார்.