தமிழ்நாடு பிரஸ் கிளப் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
1 min read
Inauguration of Water Pandal by Tamil Nadu Press Club
8.4.2023
கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு பிரஸ் கிளப் சார்பில் அண்ணா பேருந்து நிலையம் பயணிகள் நிழற்குடை அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக 24வார்டு மாமன்ற உறுப்பினர் ரோஸிட்டா திருமால் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு பிரஸ் கிளப் குமரி மாவட்ட சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீரின்றி அமையாது உலகு என்ற தலைப்பில் குமரி மாவட்ட பத்திரிக்கை நன்பர்கள் ஒன்றினைந்து இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கோடை வெயில் சுட்டெரிக்கும் காலத்தில் தண்ணீரின் மகத்துவத்தை உணரும் வகையில் விழிப்புணர்வு வாசகத்துடன் கூடிய தண்ணீர் பந்தல் அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பொதுமக்களும் தண்ணீரை வீணாக்காமல் தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இது போன்ற பொதுமக்கள் பயன் பெறும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று தமிழ் நாடு பிரஸ் கிளப் குமரி மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பாஜக நகர பொருளாளர் திருமால், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் முருகன், பத்மகுமார், மாடசாமி மற்றும் குமரி மாவட்ட தமிழ்நாடு பிரஸ் கிளப் தலைவர் சத்தியா, செயலாளர் நரசிங்க மூர்த்தி, கெளரவ தலைவர் நாகராஜன், முன்னாள் தலைவர் ராஜா சிங், மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-ஜான்டேவிஸ், நாகர்கோவில்