June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை

1 min read

Special Scholarships for Sportspersons in Tenkasi

10.5.2023
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் , தென்காசி திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டங்கள் வழங்கப்பட உள்ளது.

இதுபற்றி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் பின்வரும் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது . 1.தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் Champions Development Scheme – CDS ஊக்கத்தொகை பெறுவதற்கான தகுதிகள் : தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் இந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் . தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும் – அதிகபட்சம் 25 நபர்கள் வரை அதிகபட்சம் உதவித் தொகை ஒர் ஆண்டுக்கு ரூ .30.00 இலட்சம் வரை கடந்த 2 ஆண்டுகளில் ஒரு முறையாவது உலக தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம்பெற்றிருக்க வேண்டும் . அல்லதுஸகடந்த 2 ஆண்டு காலங்களில் ஒலிம்பிக் அல்லது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுபவை ) பங்கு பெற்றிருக்க வேண்டும். ஆசிய விளையாட்டு போட்டி – காமன்வெல்த் போட்டிகள் அல்லது ஆசிய சாம்பியன்ஷிப் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டுகாலங்களில் முதல் 8 இடங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும் . ஒலிம்பிக்கில் தனிநபர் : இரட்டையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும் . கடந்த 4 ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றிருக்க வேண்டும் .

பண்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் ( அதிகபட்சம் 75 நபர்கள் / 10 மாற்றுத்திறனாளிகள் உட்பட அதிகபட்சம் உதவித் தொகை ஓர் ஆண்டுக்கு ரூ .1200 இலட்சம் வரை அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றிருக்க வேண்டும் . ஒலிம்பிக் / ஆசிய விளையாட்டு போட்டி / காமன்வெல்த் போட்டியில் தனிநபர் விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றிருக்க வேண்டும் . 1.12. 2022 அன்று 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் . 3. வெற்றியாளர்கள் மேம்பாட்டுத்திட்டம் ( அதிகபட்சம் 100 நபர்கள் 1 10 மாற்றுத்திறனாளிகள் உட்பட மற்றும் அதிகபட்சம் உதவித் தொகை ஒர் ஆண்டுக்கு ரூ 200 இலட்சம் வரை அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள விளையாட்டு அமைப்புகளால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர்கள் மட்டும் . 1.12 .2022 அன்று 20 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் . கேர்வு முறை பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான வின்ணப்பங்கள் இதற்கென அரசால் அழைக்கப்பட்ட உயர்மட்ட குழு மூலம் ஆய்வு செய்யப்படும் . அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும விண்ணப்ப பதாரர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர் . இறுதியாக தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர் . அதிகபட்சம் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரண்டு ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும் .

இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை 0505.2023 முதல் 20.05.2023 மாலை 5.00 மணி வரை சமர்ப்பிக்கலாம் . விளையாட்டு வீரர்கள் தங்களது விண்ணப்பங்களை இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் . அஞ்சல் வழி மற்றும் நேரடி ஏற்றுக்கொள்ளப்படமாட்டது . மேற்காணும் மூன்று திட்டங்களுக்கு கடந்த 30.11.2022 முதல் 22.12.2022 வரை ஏற்கனவே , விண்ணப்பங்களை விண்ணப்பித் தவர்கள் கடந்த 4 மாதங்களில் பெற்ற பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி விவரங்களை ஏற்கெனவே உள்ள தங்களுடைய Registration ID மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம் . மேலும் , புதிய விண்ணப்பதார்கள் தங்களது 20.05.2023 வரை இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம் . மேற்காணும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையம் 95140 00777 மற்றும் 78258 83865 என்ற எண்களை , அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் . மேற்கண்ட தகவலை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.