June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்களுக்கு புதிய வாகனங்கள்

1 min read

New vehicles for panchayat union committee leaders in Tenkasi district

12.5.2023
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்களுக்கு புதிய ஸ்கார்பியோ வாகனங்களை மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் வழங்கினார்.

வாகனங்கள்

ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், அந்த ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளைக் கண்காணிக்கும் பொருட்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, 2008ஆம் ஆண்டில் முதன்முதலாக வாகனங்கள் வழங்கப்பட்டன.
13 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழக அரசால் தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் 22.04.2022 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார்.

அதன்படி, முதற்கட்டமாக 25 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 200 புதிய ஸ்கார்பியோ வாகனங்களை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் அடையாளமாக 12 வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் துரை,இரவிச்சந்திரன் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் ஆலங்குளம் திவ்யா மணிகண்டன் கடையநல்லூர் பா.சுப்பம்மாள், கீழப்பாவூர் காவேரி சீனித்துரை, சங்கரன் கோவில் லாலா பி.சங்கரபாண்டியன், வாசுதேவநல்லூர் பொன்.முத்தையா பாண்டியன் ஆகியோருக்கு புதிய ஸ்கார்பியோ வாகனங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முத்துக்குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்ச்சி பிரிவு மேலாளர் வெ சண்முகசுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

=முத்துசாமி, நிருபர், தென்காசி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.