June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவிலில் ரூ 25 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி- காவல்துறை மீட்பு

1 min read

Land scam worth Rs 25 lakh in Shankaran temple- Police rescue

13.5.2023
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் ஆள் மாறாட்டம் மூலம் ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான 64 செண்ட் நிலத்தை மோசடியாக பதிவு செய்த நிலத்தை தென்காசி மாவட்ட காவல்துறையினர் மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்தனர்

மோசடி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த சங்கரவேலு (வயது 81) என்பவருக்கு பாத்தியப்பட்ட ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான 64.5 செண்ட் நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சங்கரவேலு என்பவர் பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி ஆள்மாறாட்டம் மூலம் மோசடி செய்து மற்றொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார்.

.இதுகுறித்து பாதிக்கப்பட்ட சங்கரவேலு 02.05.23 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் துணைக் காவல் கண்காணிப்பாளர் முத்துப்பாண்டி அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் *சார்பு ஆய்வாளர்கள் உமா மகேஸ்வரி, மாரியப்பன் மற்றும் குற்றப்பிரிவு ஆளினர்கள் துரிதமாக விசாரணை மேற்கொண்டதில் சங்கரவேலு என்பவரது நிலத்தை அதே பெயர் கொண்ட சங்கரவேலு என்பவர் மோசடியாக பத்திரப்பதிவு மூலம் விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
உடனடியாக ஆள்மாறாட்டம் மூலம் மோசடியாக பத்திரப்பதிவை ரத்து செய்து அந்த நிலத்தை உரிய நபரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

அதன்படி போலி ஆவணத்தை ரத்து செய்து, மீட்கப்பட்ட நிலத்தை
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், முன்னிலையில் உண்மையான நில உரிமையாளர் சங்கரவேலு வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.