June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டை நுாலகத்தில் போட்டித் தேர்வில் 43 பேர் வெற்றி-ஆட்சித்தலைவா் பாராட்டு

1 min read

43 candidates win competitive examination in Sengottai District-Governor praises

14.5.2023
தென்காசி மாவட்டம்,, செங்கோட்டை அரசு பொதுநுாலக கட்டிடத்தில் வைத்து செங்கோட்டை நுாலக வாசகா் வட்டத்தில் சார்பில் தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் குரூப்-4 தேர்வு காவலர் தேர்வு என போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது..

இந்த விழாவிற்கு வாசகா் வட்ட தலைவா் இராமகிருஷ்ணன் தலைமைதாங்கினார். மாவட்ட நுாலக அலுவலர் மீனாட்சிசுந்தரம் வாசகர் வட்டதுணைத்தலைவா் ஆதிமூலம், இணைச்செயலாளா் செண்பகக்குற்றாலம் போட்டித் தேர்வு பொறுப்பாளா் விழுதுகள்சேகர் ஆகியோர் முன்னிலைவகித்தனா். வாசகர் வட்ட பொருளாளா் தண்டமிழ்தாசன் பா.சுதாகர் அனைரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவா் துரை.இரவிச்சந்திரன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பயிற்சி வகுப்புகள்

சென்னையில் உள்ள அண்ணா நுாலகம் போல் தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூபாய் ஆறரை கோடி மதிப்பீட்டில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய மாவட்ட தலைமைநுாலகம் அமையவுள்ளது. தென்காசியில் தற்போது உள்ள நுாலகம் வாடகை கட்டித்தில் இயங்கி வருகிறது. மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு துறையின் மூலம் பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவியா்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நான் முதல்வன் திட்டம் கீழ் மத்திய தேர்வாணைய பயிற்சி (எஸ்எஸ்எல்சி வங்கி) வகுப்புகள் செங்கோட்டை அரசு பொதுநுாலகத்தில் வரும் 25ஆம் தேதி முதல் மத்திய அரசின் தனித்திறன் மற்றும் அரசு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

இதன் மூலம் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன் பெறுவார்கள் இதற்கான விண்ணப்ப படிவங்கள் வரும் 20ஆம் தேதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

அதனைதொடர்ந்து செங்கோட்டை நுாலக வாசகர் வட்டத்தின் சார்பில் தேசிய திறனாய்வுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற 23 மாணவ, மாணவியா்கள், குரூப்-4-தேர்வில் வெற்றி பெற்ற 13 மாணவ, மாணவியா்கள், காவலர் தேர்வில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவியா்கள், ரயில்வே தேர்வில் 1 மாணவர் என மொத்தம் 43 மாணவ, மாணவியா்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவா் துரை-இரவிச்சந்திரன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி முனைவர்சுடலை, ஜேபி.கல்லுாரி முதல்வர் ஜான்கென்னடி, .அகாடமி இயக்குநர்கள் மாரியப்பன், ஐஏஎஸ் அருணாச்சலம், ஒருங்கிணைப் பாளா் ரமேஷ், எஸ்எம்எஸ்எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவா் ஜவஹர்லால்நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா். விழாவில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியா், பொதுமக்கள், வாசகர் வட்ட உறுப்பினா்கள் சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் நுாலகர் கோ.இராமசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.