கர்நாடகா தேர்தல் காங். வெற்றி-தென்காசியில் கொண்டாட்டம்
1 min read
Karnataka Election Congress Victory-Celebration in South Kashmir
14.5.2023
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை முன்னிட்டு தென்காசி மாவட்டத் தலைவரும், தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான எஸ். பழனி நாடார், மற்றும் தென்காசி நகர தலைவர் மாடசாமி ஜோதிடர் ஆகியோர் ஆலோசனையின் பேரில் காங்கிரஸார் கீழரத வீதியில் உள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்தும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு மருத்துவர் சங்கர குமார் தலைமை வகித்தார்.இந் நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதய கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஏஜிஎம் கணேசன், காஜா மைதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், இளைஞர் காங்கிரஸ் சந்தோஷ், நகர பொருளாளர் ஈஸ்வரன், மாவட்ட செயலாளர்கள் கோவிந்தராஜுலு, கண்ணன், சபரி முருகேசன், லட்சுமணன், ஏஎல்என் ஆறுமுகம், சிறுபான்மை பிரிவு ஹலால் சலீம், கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், ரபிக், நகர துணைத் தலைவர் தேவராஜன், நகர பொது செயலாளர் பீர் முகம்மது, பிரேம்குமார், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தென்காசி மவுண்ட் ரோடு ஆட்டோ ஸ்டாண்ட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நகர தலைவர் ஹலால் சலீம் தலைமை வகித்தார். மருத்துவர் சங்கர குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கணேசன், காஜாமைதீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் நகர பொருளாளர் ஈஸ்வரன், மாவட்ட செயலாளர்கள் கண்ணன், சபரி முருகேசன், லட்சுமணன், தேவராஜன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் ஏஜிஎம். கணேசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
One attachment • Scanned by Gmail