திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் புதிய நியாயவிலை கடை திறப்பு விழா
1 min read
Inauguration of a new Fair Price Shop in Tiruchirampalam Panchayat
15.5.2023
தென்காசி மாவட்டம், தென்காசி ஊராட்சி ஒன்றியம், திருச்சிற்றம் பலம் ஊராட்சியில் 14.8 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின் கீழ் புதிய நியாய விலை கடை திறக்கப்பட்டது .
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி யூனியன் துணைத் தலைவர் கனகராஜ் முத்துபாண்டியன் தலைமை வகித்தார் . தென்காசி யூனியன் சேர்மன் வல்லம் மு.ஷேக் அப்துல்லா, மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் ஆயிரப்பேரி தி.உதய கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
புதியநியாயவிலைகடையை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், தென்காசி தெற்குமாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்குஅத்தியாவசிய பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினர்
இந்த விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் பேசும்போது கூறியதாவது :-
தமிழ்நாட்டு மக்களுக்காக தனபற்பல திட்டங்களை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிபடி ஒவ் வான்றாக செய்து வருகிறவர் நமது முதலமைச்சர் . அதுபோல சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்துதருபவர் தான் நமது தலைவர் . கிராமங்களில் தாமிரபரணி தண்ணீர் கிடை முதல் முதலாக அனைத்து பகுதிகளுக்கும் ஏற்பாடு செய்து வந்தவர் தான் நமது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி . முந்தைய ஆட்சி காலத்தில் சில திட்டங்களை அவர்கள் கைவிட்டு சென்றுவிட்டனர்
. நாம் ஆட்சி பொறுப்பு ஏற்ற முதல் ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம் . அதன்படி கூடிய விரைவில் திருச்சிற்றம்பலத்திற்கு தாமிரபரணி தண்ணீர்கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . ஆண்களை விட பெண் களுக்கு தான் அதிக முக்கி யத்துவம் கொடுத்து வருகிறார் . ஒரு குடும்பத்தில் ஆணை விட பெண்ணிடம் பணம் இருந்தால் தான் அந்த குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் சரி செய்ய முடியும் . அந்த முத்தான திட்டத்தை தான் நமது முதலமைச்சர் செப்டம்பர் மாதம் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து நபர்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய திட்டத்தை வழங்கும் தொடங்கி வைக்கிறார்.
பெண் சுல்விக்கு முக்கியத்துவம் , சுய உதவி குழு உறுப்பினருக்கு தொழில் தொடங்குவதற்கு தேவையான கடனுதவி , விளையாட்டில் ஆர்வமாக மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக நற்பல திட்டங்கள் என தமிழ்நாடு வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றார் .
இந்த நிகழ்ச்சியில் திருச்சிற்றம்பலம் ஊராட்சி தலைவர் சந்திரா முருகையா , செங்கோட்டை ஒன்றிய திமுக செயலாளர் ஆ.ரவிசங்கர் சுரண்டை நகர செயலாளர் வே.ஜெயபாலன் , காங்கிரஸ் மாநில பேச்சாளர் எஸ்.ஆர்.பால்துரை, பாட்டாகுறிச்சி துணைத்தலைவர் முருகேசன், முன்னாள் யூனியன் துணை சேர்மன் முருகன் , ஊர் நாட்டாமைகள் சப்பாணிமுத்து , பாலசுப்பிர மணியன் , திமுக நிர்வாகிகள் கோவிந்தன் , ஆறுமுகம் , சண்முகவேல் , மாரி யப்பன் , மூக்கையா , திருச்சிற் றம்பலம் வார்டு கவுன்சிலர்கள் மல்லிகா தங்கபாண்டியன் , முத்துராஜ் , மகேந்திரன் , ஷிலா உள்பட பலர் கலந்து கொண்டனர் . ஊராட்சி துணைத் தலைவர் மாரிமகேஷ் நன்றி கூறினார் .