கல்லிடைக்குறிச்சி நூலகத்திற்கு போட்டித்தேர்வு புத்தகங்கள் வழங்கல்
1 min read
Supply of competition books to Kallidaikurichi Library
17.5.2023
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அரசு நூலகத்திற்கு அரசு போட்டித் தேர்வுக்கான நூல்களை சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ.திருமாறன் வழங்கினார்.
கல்லிடைக்குறிச்சி நூலகத்திற்கு குரூப் 2, குரூப் 4 அரசு போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு கல்லிடைக்குறிச்சி அக்பர் தலைமை தாங்கினார். சின்னகுமார்பட்டி பார்த்திபன் முன்னிலை வகித்தார். வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்லத்தின் இயக்குனர் வெங்காடம்பட்டி பூ.திருமாறன் புத்தகங்களை வழங்கிட கல்லிடை நூலகர் கயல்விழி பெற்றுக் கொண்டார். இன்டர்நேஷனல் புக் பவுண்டேஷன் அமெரிக்கா, மற்றும் வீசெர் இந்த சேவையை பாராட்டின.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டாக்டர் விஜி, மதுரை பாலு, கல்லிடை ஷேக், கல்லிடை அக்யூப் ஜாவித் ஆகியோர் செய்திருந்தனர்.
முடிவில் கல்லிடைக்குறிச்சி அரசு நூலகத்தின் நூலகர் கயல்விழி பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தேவையான அத்தியாவசியப் புத்தகங்களை இலவசமாக வழங்கிய வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்லத்தின் இயக்குனர் வெங்காடம்பட்டி பூ.திருமாறன் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.