தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
1 min read
Tamil Nadu Nadar Kinship Association Consultative Meeting
19.5.2023
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சிவகிரியில் உள்ள
சி.பா ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வடக்கு மாவட்ட தலைவர் கராத்தே குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்க்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார், பொதுச் செயலாளர் ஆனந்த் காசிராஜன், பொருளாளர் சுப்பிரமணியன், தென்காசி ஒன்றிய தலைவர் ராஜ் நயினார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசிய அகரக்கட்டு நாடார் தமிழகம் முழுவதும் மே மாதம் 24 ஆம் தேதியை தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு பனை தொழிலாளர்கள் தினமாக அறிவித்து இருக்கிறது சிவகிரி பகுதியில் அதிகமான பனைத் தொழிலாளர்கள் இருகிறீர்கள் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கின்ற பனைத் தொழிலாளர்கள் மே 24ஆம் தேதி பனைத் தொழிலாளர் தினமாக கொண்டாட வேண்டும் என்றார். ஏனென்றால் மே 24 ம் தேதி தமிழர் சி.பா.ஆதித்தனார் அவர்கள் நினைவு தினம் ஆகும் .
தமிழக அரசு பனைமீது திணிக்கப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும் என்று ஐந்து ஆண்டுகள் சட்டமன்றத்தில் போராடியவர் அன்றைய அரசு பனை வரியை ரத்து செய்ய முடியாது என்று சொன்ன காரணத்தினால் தான் வகித்த மேல்சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தவர்
அதன் பிறகு பனைத் தொழிலாளர்களோடு பல்வேறு போராட்டங்களை நடத்தி பனை வரியை ரத்து செய்யது வெற்றி கண்டவர் பனைத் தொழிலாளர் களுக்காக தான் வகித்த பதவியை ராஜினாமா செய்து போராடி வெற்றி கண்ட சி.பா. ஆதித்தனார் நினைவு நாளை தமிழகம் முழுவதும் உள்ள பனைத் தொழிலாளர்கள் பனைத் தொழிலாளர்களின் தினமாக கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முத்துக்குமார், காளீஸ்வரன், செயலாளர் மதன், முருகன், பொருளாளர் சந்துரு மற்றும் நிர்வாகிகள் , உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.