பந்தளம் அரண்மனையை பராமரிக்க சபரிமலை கோவில் நிர்வாகம் நிதி வழங்க கோரிக்கை
1 min read
To maintain Pandalam Palace- Sabarimala temple administration request to provide funds
19.5.2023
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகம் பந்தளம் அரண்மனையை பராமரிக்கவும், பந்தளம் மகாராஜாவின் வாரிசுகளை பாதுகாக்கவும் கேரள அரசு மற்றும் தேவசம் போர்டு உரிய நிதிஉதவி வழங்க வேண்டும். என பந்தள மகாராஜாவின் வாரிசுகள் சார்பில் வழக்கறிஞர் சரச்சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், கீழப்பாட்டா குறிச்சி பகுதியில் உள்ள பிரம்மா கோவில் நிர்வாகியும் கேர்ள் மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞருமான சரத் சந்திர போஸ் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-
பந்தளம் அரண்மனை
கேரள மாநிலம் பந்தளத்தில் உள்ள அரண்மனை மணிகண்டன் ஐயப்பன் வளர்ந்த அரண்மனை ஆகும். இது சுமார் 850 ஆண்டுகள் பழமையான அரண்மனை ஆகும். இந்த அரண்மனை 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு 13 அறைகள், முற்றங்கள், பூஜை அறை, சமையல் அறை, வற்றாத தண்ணீர் கிணறு மற்றும் குளம் உள்ளது. இந்தக் குளத்தில் தான் ஐயப்பன் தினமும் குளித்து வந்துள்ளார்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் சராசரியாக ரூபாய் 350 கோடி வருமானம் வருகிறது. இதனால் கேரள மக்கள் மிகவும் பயனடைந்து வருகிறார்கள்.
வறுமை
அதே நேரத்தில் ஐயப்பன் வாழ்ந்த பந்தளம் அரண்மனை பராமரிப்பு இல்லாமல் சிதிலம் அடைந்து காணப்படுகிறது. மேலும் சபரிமலை ஐயப்பன் கோவிலை உருவாக்கி, வளர்த்து பாதுகாத்து வந்த பந்தளம் மகாராஜாவின் வாரிசுகள் மற்றும் அரண்மனையை சார்ந்த 300 உறுப்பினர்கள் மிகவும் வறுமையில் சோகமான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவில் உலக பணக்காரர்கள் வரிசையில் உயர்ந்து நிற்கும் போது அதனை உருவாக்கிய ஐயப்பனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போதுமான அளவு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வறுமையில் வாழ்ந்து வருவது மிகவும்ஷவருந்த தக்கது.
பந்தளம் அரண்மனையும், அரண்மனையை சார்ந்தவர்களையுமா கேரள அரசு மற்றும் தேவசம் போர்டு நிர்வாகம் புறக்கணிப்பது அபத்தமானது. ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும் . ஐயப்பன் பிறந்து வளர்ந்த வாழ்ந்த பந்தளம் அரண்மனை பராமரிக்கப்படாமல் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் முற்றிலும் புறக்கணிக்கப்படுவது மிகவும் வருந்தத்தக்கது.
உண்டியல் வருமானம்
எனவே சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானத்தில் 15 சதவீதத்தை பந்தளம் அரண்மனையின் பராமரிப்பு பணிகளுக்காக வழங்குமாறு கேரள அரசுக்கும் சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் போர்டுக்கும் பரிந்துரைக்கிறேன். கடந்த காலங்களில் திரு ஆபரணப்பெட்டி குளத்துப்புழா ஐயப்பன் கோவில், ஆரியங்காவு ஐயப்பன் கோவில், அச்சன்கோவில் ஐயப்பன் கோவில், பிரம்ம லோகத்தில் உள்ள பிரம்ம சபரி ஐயப்பனுக்கு மீண்டும் பந்தல் அரண்மனை ஊர்வலத்தின் போது வரும் உண்டியல் வசூல் அனைத்தும் அரண்மனைக்காகவே இருக்கும் அதைப்போலவே இப்போதும் திரு ஆபரணப்பெட்டி ஊர்வலத்தின் போது கிடைக்கும் உண்டியல் வருமானத்தை. பந்தளம் அரண்மனைக்கி பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பதை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கேரள அரசுக்கும் தேவசம் போர்டுக்கும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
மேலும் ஆண்டுதோறும் நடைபெறும் திரு. ஆபரண பெட்டி ஊர்வலம் குளத்துப்புழா ஐயப்பன் கோவில், ஆரியங்காவு ஐயப்பன் கோவில் அச்சன்கோவில் ஐயப்பன் கோவில், வழியாக தென்காசி காசி விசுவநாதர் கோவில் வரைவரை வந்து செல்கிறது.
இந்த திரு ஆபரணப்பெட்டி தென்காசி அருகே உள்ள கீழபாட்டாகுறிச்சியில் ஐயப்பன் பிரம்மசபரி ஐயப்பனாக விரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பிரம்மலோகம் வரை சென்று வர வழிவகை செய்ய வேண்டும் . இதனால் மேலும் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் மற்றும் மக்கள் திருஆபரணப்பெட்டி யை காணவும் வணங்கி வழிபடவும் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் இதற்கு கேரளா அரசு மற்றும் தேவசம் போர்டு உடனடியாக உரிய அனுமதியை வழங்க வேண்டும்.மேலும் பந்தளம் அரண்மனை மற்றும் அதன் சுற்றுப்புறத்தை ஒரு புனித யாத்திரை மையமாக மாற்ற வேண்டும். மேலும் பந்தளம் அரண்மனையை பராமரிக்க நிதி திரட்டவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது பந்தளம் மன்னர் கேரள வர்மராஜா, அஜய் குமார், சாய் கண்ணன், கோபக் குமார், கீழப்பாட்டாக்குறிச்சி பிரம்மலோகம் ஒருங்கிணைப்பாளர் கொட்டாகுளம் இ.இசக்கி பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.