தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
1 min read
People’s Grievance Day meeting in Tenkasi
23.6.2023
தென்காசி மாவட்ட மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட் டம் மாவட்ட ஆட்சித்தலை வர் துரை.இரவிச்சந்தி ரன் தலைமையில் நடைபெற்றது .
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 208 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து மாற்றத்திறனாளிகள் நல துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு முடநீக்கு கருவிகள் தலா ரூ .13,500 மதிப்பில் மொத்தம் ரூ , 27,000 மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் ரூ .13,500 மதிப்பில் மொத்தம் ரூ .40.500 தொன்கரி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இர விச்சந்திரன் வழங்கினார் .
மேலும் இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல் , முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, மாற்றத் திறனாளிகள் உதவித்தொகை, மற்றும் இதர மனுக்கள் என 208 மனுக்கள் பெறப்பட்டது இந்த மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என் பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி , மாவட்ட ஆட்சியரின் தேர்முக உதவியாளர் முத்துமாதவன் மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா , துணை ஆட்சியர் ( பயிற்சி ) கவிதா , மாவட்ட ஆதிதிரவிடர் நலத் துறை அலுவலர் பொ நடராஜன் , மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாசஷ் , மாவட்ட மக்கள் தொடர்பு . அலுவலர் இரா.இளவரசி , உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமகப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
-முத்துசாமி, நிருபர்.