செங்கோட்டை வட்டாரத்தில் மானிய விலையில் நெல் லிதை வழங்கல்
1 min read
Supply of rice paddy at subsidized price in Sengottai area
23.5.2023
தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டார பகுதிகளில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் மானியத்தில் நெல் விதை விநியோகம் செய்யும் பணியை செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகைதீன் துவக்கி வைத்தார்
நெல் விதை
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டாரத்தில் வரும் கார் பருவத்தில் நெல் சாகுபடி செய்வது வழக்கம். நெல் சாகுபடி செய்யும் வேளாண் பெருமக்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் சான்று பெற்ற நெல் விதைகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு கார் நெல் சாகுபடிக்காக செங்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஐ.ஆர்.50 , மற்றும் அம்பை- 16 , நெல் விதைகள் இருப்பு வைக்கப் பட்டுள்ளது.
தமிழக அரசு இந்த ஆண்டும் நெல் விதைகளை மானியத்தில் வழங்கலாம் என உத்தரவிட்டுள்ளது அதன் படி தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் உத்தரவின்படியும் தென்காசி மாவட்ட மத்திய மாநில திட்டங்களின் துணை இயக்குனர் ஊமைத்துரை மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் ஜோதிபாசு ஆலோசனையின் பேரில் செங்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகைதீன் நெல் விதைகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கினார்.
இது பற்றி வேளாண்மை உதவி இயக்குனர் ஜோதிபாசு கூறியதாவது:-
செங்கோட்டை வட்டாரம் புளியரை, தெற்கு மேடு, புதூர், கற்குடி, செங்கோட்டை மேலூர் ,கீழூர், டவுண் ,சீவநல்லூர்,இலத்தூர், ,அச்சன்புதூர்,மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கார் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அனுகி விதை கிராம திட்டத்தில் பயன்பெறும் பொருட்டு இணையத்தில் பதிவு செய்யலாம் எனவும் மேலும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் அசோஸ் பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உள்ளிட்ட உயிர் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் அதனையும் பெற்றுவிதை நேர்த்தி செய்தல் நாற்றங்காலில் இடுதல், நடவு வயல்களில் இடுதல், உள்ளிட்ட தொழில் நுட்பங்களை கடைபிடிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நெல் விதை விநியோகத்திற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் குமார், அருணாசலம், முகமது ஜலால் மைதீன் ஆகியோர் செய்தனர். முடிவில் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகைதீன் அனைவருக்கும் நன்றி கூறினார்.