June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆலங்குளத்தில் திமுக அரசின் சாதனை விளக்க பிரச்சார கூட்டம்

1 min read

Campaign meeting to explain DMK government’s achievements in Alankulam

1.6.2023
தென்காசி தெற்கு மாவட்ட, ஆலங்குளம் பேரூராட்சி திமுக இளைஞரணி சார்பில் தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் நடந்தது.

இந்த கூட்டத்துக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் எம்எம் ஜோசப், முன்னாள் துணைத் தலைவர் தங்கசெல்வம், ஆலங்குளம் கூட்டுறவு சங்கத் தலைவர் உமாதேவி, மாவட்ட இளைஞரணி சக்தி சுப்பிரமணியன், திமுக கழக முன்னோடி சுப்பிரமணியன் ஆகியோ ர் முன்னிலை வகித்தனர். நகர திமுக செயலாளர் வழக்கறிஞர் நெல்சன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில பேச்சாளர்கள் வரகூர் காமராஜ், வெல்டிங் மாரியப்பன் ஆகியோர்
திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்து விளக்கிப் பேசினார்கள்..

இந்த சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் பேசும்போது கூறியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளில் தென்காசி மாவட்டத்தில் மட்டும்18 கிராமங்களில் புதிய பகுதி நேர ரேசன் கடைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. நெட்டூர் ரோட்டில் ஆலங்குளம் மார்க்கெட் அருகில் மழைகாலங்களி ல் தண்ணீர் தேங்கி கிடப்பதால் அங்கு பேவர் பிளாக்சாலை அமைக்கப் பட்டது. அந்த பகுதியில் எம்பி நிதியில் ரூ.10 லட்சம் செலவில் உயர் கோபுரஸமின்விளக்கு அமைக்கப் பட்டது. ஆலங்குளம் பேரூராட்சிக்கு ரூ.1.50 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்ட அரசு நிதி ஒது க்கீடு செய்துள்ளது. விரைவில் அதன்கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளது,

அலங்குளத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் வர இருக்கிறது. ஆலங்குளம் பேருராட்சி பகுதி தூய்மையாக இருக்க ரூ.36 லட்சம் செலவில்18 புதிய பேட்டரி ஆட்டோக்கள் வழ ங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் சிறந்த மாணவர்களுக்கு நமது முதல்வர் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கதொகையாக வழங்கி வருகிறார். இன்னும் 6 மாதத்தில் தாமிரபரணி தண்ணீர் தட்டுபாடின்றி உங்கள் வீடு தேடிவரும். அடுத்த ஆண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் நம் முதல்வரின் சாதனைகளை எடுத்துச் சொல்லி 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெறவேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன்லால், ராஜதுரை, பந்தல் அருணாசலம், மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன், சாமுவேல் ராஜா, ஒன்றிய பிரதிநிதி

ஆதிவினாயகம், தொழில் அதிபர் பால்பாண்டியன், மாவட்ட மகளிரணி அணி துணை அமைப்பாளர் சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி முடிவில் நகர இளைஞரணி அமைப்பாளர் முருகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.