நீட் தேர்வில் தமிழகத்தின் வளர்ச்சியும் சாதனையும்
1 min read
Development and achievement of Tamil Nadu in NEET examination
14.6.2023
இந்த ஆண்டு நீட் தேர்வு நாடு முழுவதும் 490 நகரங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் கடந்த மே 7-ஆம் தேதி நடைபெற்றது. இதில், 20.38 லட்சம்பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட 24 மாவட்டங்களில் அமைக்கப் பட்டிருந்த சுமார் 200 தேர்வு மையங்களில் 1.44 லட்சத் துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.
நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி,ஒடியா,அஸ்ஸாமி,வங்காளம், உருது உள்ளிட்ட மொழிகளில் தேர்வு நடைபெற்றது. மணிப்பூரில் மட்டும் கலவரம் காரணமாக வேறு தேதியில் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு பெற்று, தேர்வு முடிவுகள் https://www.nta.ac.in என்ற இணையப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வெளியானது
இந்த நுழைவுத் தேர்வில் (நீட்) தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர், 720-க்கு 720 மதிப் பெண்கள் பெற்றுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த போரா வருண் என்பவரும் இதே மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
இதேபோன்று தமிழகத்தைச் சேர்ந்த கௌஸ்தவ் பௌரி என்ற மாணவர் மூன்றாவது இடத்தையும், சூர்யா சித்தார்த் என்ற மாணவர் 6-ஆவது இடத்தையும், வருண் என்ற மாணவர் 9-ஆவது இடத்தையும் தேசிய அளவில் பிடித்துள்ளனர்.
நீட் தேர்வு வரலாற்றிலேயே தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இத்தகைய சிறப்பிடங்களைப் பெறுவது இதுவே முதன் முறை. அதிலும், முதல் பத்து இடங் களில் நான்கு தமிழக மாணவர்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுவரை இல்லாத வகை யில் நீட்தேர்வு எழுதிய 1.44 லட்சம் தமிழக மாணவர்களில், 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 35 சதவீதம் அதிகம்; எனினும், தேசிய அளவில் நடப்பு ஆண்டில் முதல் 50 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த மாணவியும் இடம் பெறவில்லை.
தேசிய அளவில் தமிழக மாணவர்களின் சாதனை
பிரபஞ்சன் 720
கௌஸ்தவ் பௌரி 716
சூர்யா சித்தார்த் 715
வருண் 715
சாமுவேல் ஹர்ஷித் சாபா 711
ஜேக்கப் பிவின் 710
பயிற்சி
தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த தமிழக மாணவர் பிரபஞ்சனின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள மேல் மலையனூர் ஆகும். அவரது பெற்றோர் ஜெகதீஷ் மற்றும் மாலா இருவரும் விழுப்புரம் மாவட்ட அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள்.
சென்னையில் உள்ள தனியார் பள்ளியொன்றில் பிளஸ்-2 படித்த பிரபஞ்சன், அங்கேயே நீட் பயிற்சி பெற்றார்.
இதுபற்றி மாணவர் பிரபஞ்சன் கூறும்போது, “எனது குடும் பத்தில் முதல் தலைமுறை மருத்துவராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது’ என்றார். மேலும் அவர் கூறும்போது, “கடந்த ஆண்டுதான் பிளஸ் 2 முடித்தேன். நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே அபார வெற்றி கிடைத்திருப்பது மகிழ்ச்சிஅளிக்கிறது. டாக்டராக ஆக ணே்டும் என்ற நீண்டநாள் கனவில் நான் படிக்கவில்லை. உயிரியல் பாடம் பிடிக்கும் என்பதால் இந்த பாடத்தை எடுத்து படித்தேன். இதன் மூலம் டாக்டராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் ஜிப்மர், அல்லது டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் படிக்க விரும்புகிறேன். நீட் தேர்வு கடிமானது என்ற நிலையில் இருந்து மாணவர்கள் வெளியே வரவேண்டும். அதிக முயற்சி வெற்றியைத் தரும்” என்றார்.
உத்தர பிரதேசத்தில் மட்டும் 1.39 லட்சம் தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் வாயிலாக, அதிக தேர்ச்சி பெற்ற மாநிலம் என்ற பெருமையை உ.பி., பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, மஹாராஷ்டிராவில் 1..31 லட்சம் பேரும், ராஜஸ்தானில் ஒரு லட்சம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில், 1.44 லட்சம் பேர் எழுதிய நிலையில், 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.