மகிழ்வண்ணநாதபுரத்தில் ரூ.20 லட்சத்தில் வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா
1 min read
Inauguration of Rs.20 lakhs classroom building in Malayavannathpuram
14.6.2023
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள மகிழ்வண்ணநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய்.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடத்தை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் திறந்து வைத்தார்.
வகுப்பறை
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், பெத்தநாடார்பட்டி ஊராட்சி மகிழ்வண்ண நாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 15ஆவது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரிசீனித்துரை தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணிகலைச்செல்வன், துணைத்தலைவர் ஜெயராணிஅந்தோணிராஜ், ஒன்றிய கவுன்சிலர் ராதாகுமாரி மாரிமுத்து முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு
மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று, புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து பள்ளிக்கு மின் விசிறியும், கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவியருக்கு பரிசும் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச்செயலாளர்கள் சிவன்பாண்டியன், சீனித்துரை, பேரூராட்சி கவுன்சிலரும், மாவட்ட பிரதிநிதியுமான சீ.பொன்செல்வன், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் விஜயன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், மற்றும் அமல்ராஜ், முத்துராஜ், ஆல்பின், பொருள்செல்வன், லட்டு (எ) ரத்தினசாமி, சேர்மலிங்கம், தங்கேஸ்வரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளித்தலைமை ஆசிரியை அனைவருக்கும் நன்றி கூறினார்.