June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

குமரியில் கடந்த 15 நாட்களில் அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி வந்த 100 டாரஸ் லாரிகள் பறிமுதல்

1 min read

100 taurus trucks loaded with heavy mineral resources seized in last 15 days in Kumari

16.6.2023
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி வந்த 100 டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கனிமவளம் கடத்தல்

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு தினமும் டாரஸ் லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல் லப்பட்டு வருகிறது. கனிம வளங்கள் அதிக பாரத்துடன் கொண்டு செல்லப்படுவ தால் சாலைகள் சேதம் அடைவதுடன் விபத்துகளும் அதிக அளவு நடைபெற்று வருகிறது. எனவே அதிக பாரம் ஏற்றி செல்லும் டாரஸ் லாரி களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் நகர பகுதியில் காலை நேரங்களில் கனரக வாக னங்கள் நுழைய தடை இருந்து வரும் நிலையில் புறநகர் பகுதிகளில் அதிக அளவு கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
அப்டா மார்க்கெட்டில் இருந்து புத்தேரி வழியாக இறச்சகுளம் களியங்காடு வழியாக கேரளாவிற்கு கனிம வளங்கள் லாரிகளில் கொண்டு செல்லப்படுவ தால் அந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
கனிம வள கடத்தலை கட்டுப்படுத்த இரவு, அதிகாலை வேளைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். களியக்காவிளை, ஆரல்வாய்மொழி, அஞ்சு கிராமம், நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்து வரு கிறார்கள். அனுமதி இன்றி கனிம வளங்கள் கொண்டு செல்லும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

பறிமுதல்

கடந்த 15 நாட்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ரூ.25 லட்சம் அபராத தொகையாக வசூல் ஆகி யுள்ளது. அதிக பாரம் ஏற்றி வந்து பிடிபட்ட லாரிகள் அந்தந்த போலீஸ் நிலை யங்களின் முன் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அபராத தொகை கட்டிய பிறகு மட்டுமே அந்த லாரிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. கோட்டார் பகுதியில் நேற்று முன்தினம் அனுமதி இன்றி கனிம வளங்களை கொண்டு சென்ற 9 டாரஸ் லாரிகள் பிடிபட்டது. அந்த லாரி டிரைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிடிப்பட்ட லாரிகள் போலீஸ் நிலையத்தின் முன் பகுதியில் சாலையில் நிறுத்தப்பட் டுள்ளது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் சோதனை தீவிரப்படுத்தப் பட்டுள்ள நிலையில் தற் போது காலை நேரங்களில் அதிக அளவு வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. நாகர்கோவில் நகர பகுதி களிலும் காலை நேரங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. எனவே போலீசார் காலை நேரங்களிலும் சோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.