கடலூர் அருகே பஸ்கள் மோதல்; 4 பேர் பலி-80 பேர் படுகாயம்
1 min read
Buses collide near Cuddalore; 4 dead and 80 injured
19.6.2023
கடலூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலியானார்கள். இதில் 80 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து
கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதேபோல திருவண்ணாமலையிலிருந்து பண்ருட்டி வழியாக கடலூருக்கு மற்றொரு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது.
திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக வந்த பேருந்து மேல்பட்டாம்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது முன் பக்கத்தில் இருந்த டிரைவர் சீட்டுக்கு கீழே டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தாறுமாறாக ஓடியது. மறுபுறும் கடலூரில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து டிரைவர் இதனை கவனித்தார் தாறுமாறாக வரும் பேருந்து எப்போது வேண்டுமானாலும் விபத்துக்குள்ளாகும் என்பதை கணித்து பேருந்தை சாலையின் ஓரமாக இயக்கி மெதுவாக சென்றார்.
திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக வந்த தனியார் பேருந்து கடலூரிலிருந்து பண்ருட்டிக்கு சென்ற பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
4 பேர் பலி
இந்த விபத்தின் போது இடி இடித்தது போல் சத்தம் எழுந்தது இதில் இரண்டு தனியார் பஸ்களில் பயணம் செய்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.
விபத்தில் இரண்டு பஸ்ஸில் முன்பக்கமும் முற்றிலும் சேதம் அடைந்தது. முன்பக்க இடிபாடுகளுக்கு இடையே பயணிகளும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களும் சிக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர்.
கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த தனியார் பஸ் டிரைவர் அங்காள மணி (வயது 33), திருவெண்ணைநல்லூர் முருகன் (45), பண்ருட்டி சேமகோட்டையைச் சேர்ந்த சீனிவாசன் (55) மேலும் அடையாளம் தெரியாத ஒருவர் ஆகியோர் இறந்தனர். இவர்களது உடல்களை போலீசார் மீட்டு பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
80 பேர் படுகாயம்
இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 80க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் இதுகுறித்து போலீஸாருக்கும் ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தது.‘
மேலும் பண்ருட்டி போலீஸ் சூப்பிரண்டு சபிப்புல்லா நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் பம்பை இடத்திற்கு விரைந்தனர். அங்கிருந்து பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருவண்ணாமலையிலிருந்து பண்ருட்டி வழியாக கடலூருக்கு வந்த பஸ் டிரைவர் மீட்க முடியாத நிலை உருவானது. இவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி வந்தார். உடனடியாக தீயணைப்பு படை வீரர்களும் கிரேன் பொக்லைன் போன்ற எந்திரங்களும் வரவழைக்கப்பட்டது. இதில் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு இடுப்பாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய டிரைவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பண்ருட்டி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர்.
ஆபத்தான நிலை…
காலை 10 மணிக்கு நடந்த விபத்தின் மீட்பு பணிகள் 12 மணியளவில் முடிந்தது படுகாயம் அடைந்தவர்களில் ஏராளமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதனால் பள்ளி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.2 லட்சம் நிவாரணம்
விபத்து செய்தியை கேட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் விபத்து குறித்து கேட்டறிந்தார் பின்னர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 2 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டார் மேலும் விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 மற்றும் லேசான காயமடைபவர்களுக்கு ரூபாய் 25000 நிவாரணமாக வழங்கவும் உத்தரவிட்டார்
இதனை அடுத்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் செல்போன் வாயிலாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் அவர்களை தொடர்பு கொண்டு விரைவாக துரிதமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அமைச்சர்கள் நேரில் ஆறுதல்
கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ ஐயப்பன், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் நேரில் ஆறுதல் கூறினார்கள்.