அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை: மா.சுப்ரமணியன் தகவல்
1 min read
Minister Senthil Balaji will undergo surgery tomorrow: M. Subramanian informs
20.6.2023
அமைச்சர் செந்தில்பாலாஜிக்.க நாளை அதிகாலை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
செந்தில்பாலாஜி
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என அவருடைய மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 15-ந் தேதி விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியை பரிசோதித்து இரு மருத்துவக் குழுவினர் அளித்த அறிக்கையை சந்தேகிக்க முடியாது எனக் கூறி, அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அனுமதி அளித்து உத்தரவிட்டது.
தற்போது அமலாக்கத்துறை காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ரத்த நாளங்களில் அடைப்பு கண்டறியப்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நாளை அதிகாலை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி அளித்த புகாரின் பேரில், அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட போது மனித உரிமை மீறப்பட்டதாக அவரது மனைவி மேகலா புகார் அளித்துள்ளார். அமலாக்கத்துறை சென்னை மண்டல இணை இயக்குநர் 6 வாரத்தில் விளக்கமளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.