கால்வாய் சீரமைக்க அதிகாரிகள் காலில் விழுந்த கடையம் விவசாயிகள்
1 min read
Farmers were the last to fall on the feet of officials to repair the canal
22.6.2023
கடையம் குட்டிகுளத்திலிருந்து பாசனத்திற்கு செல்லும் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தி விவசாயிகள் அதிகாரிகள் காலில் விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விவசாயிகள்
தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில்
விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான குட்டிக்குளம் கால்வாயை சீரமைக்க கோரி 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று கடையம் ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் தலைமையில் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு வந்து கால்வாயை சீரமைக்க கோரி கோஷமிட்டனர். அதன்பின் . அலுவலக வாசலில் அமர்ந்து கால்வாய் சீரமைக்க வேண்டும் என கோஷமிட்டபடி உட்கார்ந்திருந்தனர்.
பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் முருகேசன் கடையம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார்,வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் (பொறுப்பு) கருப்பசாமி ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் .
நீர்பாசன கமி்ட்டி
நீர்ப்பாசன கமிட்டி தேர்தல் நடந்து 15 ஆண்டுகள் ஆகின்றன. நீர்ப்பாசனக் கமிட்டியில் நிதி உள்ளது. அந்த நிதியை எடுக்க வேண்டும் என்றால் தேர்தல் நடத்த வேண்டும். தற்காலிகமாக கால்வாய் சரி செய்யப்படும் தேர்தலுக்குப் பின்னர் நிரந்தரமாக கட்டிக் கொடுக்கப்படும் என்று உதவி செயற் பொறியாளர் முருகேசன், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் (பொறுப்பு) கருப்பசாமி ஆகியோர் உறுதியளித்தார் .
காலில் விழுந்தனர்
அப்போது கவுன்சிலர் மாரி குமார் மற்றும் இரண்டு விவசாயிகள் திடீரென அதிகாரிகள் காலில் விழுந்து அய்யா எங்கள் பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான குட்டிக்குளம் கால்வாயை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் கடும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கிழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத், கடையம் ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார், சமூக ஆர்வலர் கஜேந்திரன், தேவேந்திரகுல வேளாளர் சங்க கூட்டமைப்பு தலைவர் பாரதி நகர் சங்கர், ரயில்வே முருகன், பட்டதாரி விவசாயி தியாகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.