June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அரசு மருத்துவ மனையில் மருத்துவ தினவிழா

1 min read

Medical Day at Tenkasi Government Hospital

2.7.2023
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் பள்ளி குழந்தை களுடன் தேசிய மருத்துவர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை யில் ஜூலை ஒன்றாம் தேதி மருத்துவர் தினத்தை இன் மருத்துவர்களும், பள்ளி குழந்தைகளும் இணைந்து சிறப்பாக கொண்டாடினர். இன்று உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு வடகரை ஜாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யிலிருந்து சுமார் 100 குழந்தைகளை பள்ளியின் இயக்குனர் அகஸ்டின் ஜோசப் அழைத்து வந்தார்.

குழந்தைகள் அனைவரும் தென்காசி மருத்துவர்கள் ஒவ்வொருவருக்கும் வெளி நோயாளி பிரிவில் சென்று மருத்துவர் தின வாழ்த்துக் களை கூறி பூக்களை பரிசாக வழங்கினர்.

தென்காசி தலைமை மருத்துவர் டாக்டர் இரா.ஜெஸ்லின் , பள்ளி குழந்தைகளை மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து, வந்து அவர்களோடு கலந்துரையாடினார்.
அனைத்து மருத்துவர்களும் குழந்தைகளுடன் சேர்ந்து கேக் வெட்டி மருத்துவர் தினத்தை சிறப்பாக கொண்டாடினர். கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்ஸின் குழந்தைகளை பாராட்டி, இனிப்புகள் வழங்கி, நல் ஆலோசனைகள் வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் 100 மரக்கன்றுகளை குழந்தைகளுடன் சேர்ந்து மருத்துவர்கள் நட்டனர். தாங்கள் நட்ட மரக்கன்றுகளை தொடர்ச்சியாக நாங்களே பராமரிப்போம் எனக் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சி பட செய்தது.

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரா. ஜெஸ்லின் கூறும் போது, இந்த வருட மருத்துவர் தினத்தை பள்ளி குழந்தைகளுடன் கொண்டாடியது,
மருத்துவர்கள் அனைவரும் பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடியது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வு எனக் கூறினார்.

இந்த மருத்துவர் தினத்தை சிறப்பாக கொண்டாட குழந்தைகளை அழைத்து வந்த ஜாய் மெட்ரிக் ஸ்கூல் இயக்குனர் அகஸ்டின் ஜோசப், நிர்வாகி சாலமோன், செயலாளர் ஜெயா சாலம
மோன், முதல்வர் ஜோதி, துணை முதல்வர் கார்த்திகை கணபதி மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தென்காசி மருத்துவர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் எஸ் எஸ் ராஜேஷ், மருத்துவர் லதா,குழந்தைகள் மருத்துவர் கீதா, புனிதவதி, செல்வ பாலா ,விஜயகுமார்,, மாரிமுத்து, மது ,ராம் சுந்தர், நாகஜோதி,, திருமலை ,அரவிந்த் ராம் மற்றும் செவிலிய கண்காணிப் பாளர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் ,ஆய்வக நிபுணர்கள், பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

முடிவில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரா. ஜெஸ்லின் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.