தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் உடைப்பு- ரவிஅருணன் அறிக்கை
1 min read
Breakage in Thamirapharani Joint Water Project Pipelines- Ravi Arunan Report
8.7.2023
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களின் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகு வதோடு , குடிநீர் அசுத்தம் செய்யப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவே உடனடியாக அந்த குழாய்களை சீரமைக்க கோரி தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ரவி அருணன் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
அந்தக் கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது;-
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம்
தென்காசி மாவட்டத்தில் தாமிரபரணி குடிநீர் திட்டம் எத்தனையோ மாவட்ட மக்களின் தாகம் தீர்த்து வைக்கிறது.அதிலும் குறிப்பாக நான் தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்த காலத்தில் நிறைவேற்றப்பட்ட தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் கடையநல்லூர் நகராட்சிகள் குற்றாலம், மேலகரம், புதூர் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கான தாமிரபரணி குடிநீர் திட்டம் லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது.
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக கனரக ராட்சச வாகனங்களில் அளவுக்கதிகமான கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்ல கொண்டு சென்றதன் விளைவாக தற்போது அந்த குடிநீர் செல்லும் குழாய்கள் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்வதோடு மட்டுமல்லாது குடிநீர் மாசுபடுகிறது. ஆங்காங்கே காலைக்கடன் கழிப்பவர்கள் இந்த நீரில் அசுத்தம் செய்து பயன்படுத்துவதால் அதை குடிக்கவே இயலாத வகையில் அசுத்தமான குடிநீர் குழாய்கள் வழியாக மக்களுக்கு வழங்கப்பட்டது வருகிறது.
குழாய் உடைப்புகளை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரியம் நேரடியாக
பணியை மேற்கொள்ளாமல் பராமரிப்பு பணிகளை தனிப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு
ஆண்டு குத்தகைக்கு விட்டுள்ளதாக அறிகிறேன். அவர்கள் உடைப்புகளை சரி
செய்யாமல் அடைத்ததாக கூறி பணம் பெற்று வருகிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்பு தென்காசி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கனரக வாகனங்களால் குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட லாரி மற்றும் குவாரி உரிமையாளர்களே பொறுப்பு அதை சரி செய்யும் தொகை அவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை அவ்வாறு எதுவும் செய்யப்படவில்லை மாறாக அரசு பணத்தில் இருந்துதான் அதற்கு செலவு செய்யப்படுகிறது. அப்படியிருந்தும் உடைப்புகள்
முழுமையாக சரி செய்யப்படவில்லை. உடைப்புகளை சரி செய்தோம் என்று லட்சக்கணக்கில் பணத்தை
சுருட்டினாலும் உடைப்பு சரி செய்யப்படாததால் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் தினமும் வீணாகி கொண்டிருப்பது குறித்து எந்த அதிகாரியும் நகர்மன்ற மக்கள் பிரதிநிதிகளும் கவலைப்பட்டதாக தெரியவில்லை பேரூராட்சி நகர்மன்ற சட்டமன்ற மக்கள் பிரதிநிதிகள் இந்த விஷயத்தில் அக்கறை கட்டுவதில்லை. என்பது வேதனைக்குரிய விஷயம்.
உதாரணமாக கடையத்திலிருந்து மாதாபுரம் வரை 4 கிலோ மீட்டர் தூரத்திற்குள் தாமிரபரணி குடிநீர் திட்ட குழாய்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் உடைந்து கடந்த இரண்டு வருடங்களாக தண்ணீர்ர வீணாகிக் கொண்டு இருக்கிறது.இவ்வாறு நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் குழாய் உடைந்து மாசுபட்ட குடிநீரே மக்களை சென்றடைக்கிறது உடைப்புகளை அடைப்பதற்கு பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை
பராமரிப்பே நடக்காத போது எதற்காக பராமரிப்பு என்று பெருந்தொகை செலவிடப்பட வேண்டும்.? இதில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாகவும் அறிகிறேன் ஆகவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இது குறித்து கவனம் செலுத்தி குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு பிரிவின் மூலம் உடைப்புகளை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது பல லட்சக்கணக்கான மக்கள் குடிநீராதார பிரச்னை என்பதால் முதல்வர் அவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்
இன்னும் பத்து தினங்களுக்குள் உடைப்புகளை சரி செய்யா விட்டால் ஆங்காங்கே தண்ணீர் உடைந்து செல்லும் இடங்களில் இயற்கை வள
பாதுகாப்பு சங்கம் சார்பாக நாற்று நடும் போராட்டம் நடைபெறும். அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மாவட்ட ஆட்சித் தலைவர்
அலுவலகத்தை முற்றுகை யிடும் போராட்டம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த மனுவின் நகலினை தமிழகஷஉள்ளாட்சி துறை அமைச்சர், உள்ளாட்சித் துறை செயலாளர், நகாராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் செயலாளர், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பி உள்ளார்.