புளியங்குடியில் முதலமைச்சர் குறித்து அவதூறு- பா.ஜனதா நிர்வாகி கைது
1 min read
Slandering the Chief Minister in Puliangudi- BJP executive arrested
3.7.2023
புளியங்குடியில் முதலமைச்சர் குறித்து அவதூறியதாவது பா.ஜனதா நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
பாஜக செயலாளர்
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே டி.என். புதுக்குடி பகுதியை சேர்ந்தவர் பிச்சையா என்ற கனகராஜ் (வயது 41). இவர் கேரளாவில் ஜவுளி வியபாரம் செய்து வருகிறார். புளியங்குடி பா.ஜனதா வார்டு செயலாளராக உள்ள இவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறாக பதிவிட்டு வந்துள்ளார். அதனை தொடர்ந்து கனகராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. நகர செயலாளர் அந்தோணிசாமி புளியங்குடி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.