June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

பாவூர்சத்திரம் அருகே ரூ.6 லட்சம் கொள்ளை வழக்கில் பெயிண்டர் உள்பட 3 பேர் கைது

1 min read

3 people, including a painter, were arrested in a Rs 6 lakh robbery case near Bhavoorchatram

14.7.2023
பாவூர்சத்திரம் அருகே ரூ.6 லட்சம் கொள்ளை வழக்கில் பெயிண்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொள்ளை

பாவூர்சத்திரம் அருகே கீழ அரியப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி லெட்சுமி(வயது 52). இவர் தனது வீட்டின் அருகே கடந்த மாதம் புதிதாக வீடு கட்டினார். இந்நிலையில் அவரது பழைய வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாதபோது மர்ம நபர்கள் அங்கு சென்று பீரோவை உடைத்து ரூ.6 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து அவர் பாவூர்சத்திரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்று பாவூர்சத்திரம் பிரதான சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சந்தேகத்தி ற்கிடமான முறையில் வந்த பெயிண்டரான கடைய நல்லூரை சேர்ந்த செல்வராஜ் என்ற துரை(வயது 47) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். 3 பேர் கைது இதில், லெட்சுமி வீட்டில் இருந்த பீரோவை உடைத்து பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் லெட்சுமி வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பதற்காக சென்றபோது அங்கு பீரோவில் பணம் இருப்பதை தெரிந்து கொண்டு தனது நண்பர்களான மேல கடைய நல்லூரை சேர்ந்த கண்ணன் (35) மற்றும் பால்ராஜ்(28) ஆகியோருடன் சேர்ந்து பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சத்தை மீட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.