செந்தில் பாலாஜி கைது சரியானதே; காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் – சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு
1 min read
Senthil Balaji’s arrest was correct; It is necessary to take custody and investigation – Madras High Court judgement
14.7.2023
செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை சட்டப்படியே கைது செய்துள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும் ஐகோர்ட்டு கூறியுள்ளது.
செந்தில் பாலாஜி
சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு கடந்த 12-ம் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில், 3 நாள் விசாரணை நடைபெற்றது
இருந்தரப்பு வாதங்கலையும் கேட்ட நீதிபதி இன்று தீர்ப்பு அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
தடை கோர முடியாது
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தான் குற்றம் செய்யவில்லை என்பதை செந்தில் பாலாஜி விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.
செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான். கைது செய்யப்பட்டவர்களை விசாரணை அதிகாரிகள் விசாரணை காவலில் எடுக்க வேண்டியது அவசியம்.
பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார் மூன்றவாது நீதிபதி சி.வி.கார்த்திகேயன். நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பு சரியானது என்று உறுதி செய்தார் மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அமலாக்கதுறை சட்ட விதிகளின் படி தான் கைது செய்துள்ளது.
செந்தில்பாலாஜியின் சிகிச்சை நாட்களை அமலாக்கத்துறை காவல் நாட்களாக எடுத்துக்கொள்ள முடியாது. செந்தில்பாலாஜியின் சிகிச்சை முடிந்ததும் அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம்.
இவ்வாறு நீதிபதி கூறி உள்ளார்.