தென்காசி, கடையநல்லூரில் தொழில்நுட்ப மையங்கள்- முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min read
Technology Centers at Tenkasi, Kadayanallur- Chief Minister Stalin inaugurated
14.7.2023-
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் தென்காசி அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் தென்காசி மற்றும் கடையநல்லூர் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை காணொலி வாயிலாக நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தென்காசி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்தி ரன், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா, தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், துணை தலைவர் கே.எல்.எல். சுப்பையா மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாபன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது,
தென்காசி மாவட்டம் தென்காசி மற்றும் கடையநல்லூர் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் தலா ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில் நுட்ப மையங்களில் தலா.ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் இப்பகுதியில் உள்ள மாணவ செல்வங்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர்; இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்துள்ளார். இந்த மையமானது 3 ஏக்கர் பரப்பளவில் 4 வகுப்பறைகள், ஆய்வகம், ஆசிரியர் அறை, மின் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட வசதிகளுடன் மிகச்சிறப்பாக கட்டப்பட்டுள்ளது. எனவே மாணவ செல்வங்கள் இவ்வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன்; தெரிவித்தார்.
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா பேசியதாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழ கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தென்காசி மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் தொழில்நுட்ப மையங்கள் அமைவதன் மூலம் தொழில் கல்வியில் ஆர்வம் உள்ள மாணவர்கள் தொழில் பயிற்சி மையங்களில் அதிக அளவில் சேர்ந்து பயனடைய வாய்ப்பு ஏற்படும் இந்த நல்வாய்ப்பினை மாணவ செல்வங்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் ஜார்ஜ் ப்ராங்கிளின், அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வர் மணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி மற்றும் பயிற்றுனர்கள், மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார் பேசியதாவது,
தமிழகத்தில் தற்பொழுது தொழில் பயிற்சி முடித்த மாணவர்களுக்கான தேவை அதிகரித்து கொண்டே இருக்கிறது மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி பயில வேண்டும் தோல்வி கண்டு துவளாது தொடர் முயற்சி மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர்; நமது பகுதியில் உள்ள மாணவ செல்வங்களுக்கு கொடுத்துள்ள இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.
கடையநல்லூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இடைகால் ஊராட்சி மன்ற தலைவர் முத்தம்மாள் மற்றும் பயிற்றுனர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.