குற்றாலத்தில் உலக பாம்புகள் தின விழா
1 min read
orld Snake Day Celebration at Courtalam
15.7.2023
தென்காசி மாவட்டம், குற்றாலம், நெல்லை வன உயிரின சரணாலயம், தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி இணைந்து உலக பாம்புகள் தின விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது.
இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜெய் நிலா சுந்தரி அவர்கள் தலைமை தாங்கினார்.
ஊர்வன பாதுகாவலர் கடையநல்லூர் சேக் உசேன், இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனச்சரக அலுவலர் கருணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இலஞ்சி இராமசாமி பிள்ளை மேல்நிலைபள்ளி ஆசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவருமான சுரேஷ்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விலங்கியல் துறை தலைவர் முனைவர் வசந்தி அனைவரையும் வரவேற்றார்.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறுவர் பூங்கா பகுதியில் இருந்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்தப் பேரணியில் இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி , செங்கோட்டை ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி, கடையநல்லூர் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் உலகா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வனவளம் , நீர் வளம், நில வளம் காப்போம், சூழல் காப்போம் சுகம்பெறுவோம், பல்லுயிர் பெருக்குவோம், வன வேட்டையை தடுப்போம்., பாம்புகளை பாதுகாப்போம் என்ற கோஷங்களுடன் நகரின் முக்கிய வீதி வழியாக ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி அரங்கை அடைந்தனர்.
அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் புளியங்குடி வனச்சரக அலுவலர் சிக்கந்தர் பாட்ஷா, சிவகிரி வனச்சரக அலுவலர் மௌனிகா, ஊர்வன பாதுகாவலர் கடையநல்லூர் சேக் உசேன், ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரை நிகழ்த்தினர்.
தென்காசி கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் தன்ராஜ் கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கலை பண்பாட்டில் சிறந்து விளங்கிய சித்திர சபை நாட்டியாஞ்சலி புருஷோத்தமன், ஜீ தமிழ் பாடகர் மணிகண்டன், இலஞ்சி கால்நடை மருத்துவர் அருண் பாண்டியன் ,புகைப்பட கலைஞர் டோணி , இளம் பாடகர் சமிக்ஷா ஆகியோருக்கு யூத் ஐகானிக் விருது வழங்கி கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றோருக்கு பாராட்டு சான்றும் வழங்கி வாழ்த்தினார்.
இந்த நிகழ்வில் பசுமைப் படை ஆசிரியர் கணேசன் , சரவணன், டெல்டா டிரேடர்ஸ் உரிமையாளர் சுலைமான், தென்காசி மாவட்ட வனத்துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், டென்காசி லைப் சின்னத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். . குற்றாலம் வனச்சரக அலுவலர் சீத்தாராமன் அனைவருக்கும் நன்றி கூறினார்..