June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

வெயில் அதிகரிப்பால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் குறைந்தது

1 min read

Due to the increase in heat, the water in Kurdalam falls has decreased

16.7.2023
வெயில் அதிகரிப்பால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் குறைந்தது. ஆனாலும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது-

குற்றாலம்

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழை கால கட்டத்தின் போது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த சீசன் காலத்தில் அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்வார்கள். வார இறுதி நாட்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும்.
இதனையொட்டி சாலையோர கடைகள், அருவிக்கரைகளில் கடைகள் அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து ரம்பூட்டான் உள்ளிட்ட ஏராளமான சீசன் பழங்கள் விற்பனைக்கு வரும்.

இந்த ஆண்டு சீசன் சற்று தாமதமாகவே தொடங்கியது. ஆனாலும் தொடர்ந்து மழை பெய்யாத காரணத்தினால் சுமார் 10 நாட்கள் மட்டுமே தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் ஏராளமானோர் குளித்து மகிழ்ந்தனர்.

தண்ணீர் குறைந்தது

இந்நிலையில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. ஆனாலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குளித்து செல்கின்றனர். நேற்று தென்காசி மாவட்டம் முழுவதும் கடுமையான வெயிலின் தாக்கம் இருப்பதால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது.
இருப்பினும் இன்று விடுமுறை தினம் என்பதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால் அனைத்து அருவிகளிலும் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக இன்று காலை முதலே ஐந்தருவி மற்றும் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவற்றில் வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.