தோரணமலையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி-செண்பகராமன் தகவல்
1 min read
Employment training for youth in Thoranamalai- Senpakaraman information
17.7.2023
தோரணமலை முருகன் கோவிலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
தோரணமலையில் அறப்பணி
தென்காசி மாவட்டம் தோரணமலை மிகவும் சிறப்பு வாய்ந்த ஆன்மிகப்பூமி. இங்கு மலையில் குன்றுக்குள் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
அகத்தியர், தேரையர் வாசம் செய்த தலம் இது. தேரையர் மருத்துவ சேவைசெய்து ஐக்கியமான இடமும் இதுதான்.
இங்கு அருள்பணியோடு அறப்பணியும் நடக்கிறது. பரமப்ரை அறங்காவலராக ஆ.செண்பகராமன் பொறுப்பு ஏற்றப்பிறகு கோவில் சார்பாக பல்வேறு பொதுப்பணிகளை செய்து வருகிறார். தினமும் மதியம் அன்னதானம் நடக்கிறது. ஞாயிறு, கடைசி வெள்ளிக்கிழமை, பவுர்ணமி கிரிவல நாட்களில் காலையில் சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது.
கொரோனா தொற்று காலத்தில் அரசின் உத்தரவுபடி பொட்டலமாக உணவு வழங்கப்பட்டது. அப்போது கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் உணவு பொட்டலம் வழங்கப்பட்டது.
இங்கு பக்கர்கள் வாயிலாக மாணவர்கள் தத்து எடுக்கப்பட்டு படிக்க வைக்கப்படுகிறார்கள். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான ஆலோசனை நிகழ்ச்சி வல்லுநர்களால் பலமுறை நடத்தப்பட்டது. சிறுவர்களையும் இளைஞர்களையும் ஊக்கப்டுத்து மே மாதம் ஞாயிற்றுக்கிழமைதோறும் கோடை கொண்டாட நிகழ்ச்சி நடந்தது.
இதுதவிர கோவிலில் நூல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஆன்மிக புத்தகங்கள் மட்டுமின்றி, பொதுஅறிவு புத்தகங்களும் உள்ளன.
கடந்த 14ந் தேதி வெள்ளிக்கிழமை தோரண மலையில் சீருடை பணியாளர் தேர்வு பயிற்சிக்கான விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடந்தது. தோரணமலை முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் காவல்துறை ராணுவம் தீயணைப்பு துறை ரெயில்வே காவல்துறை போன்ற சீருடை பணியாளர் தேர்வுக்கான உடல் திறன் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக சுற்றுவட்டார கிராமப்புறம் மாணவர்கள் பயன்பெறும் வண்ணம் உடல் திறனை மேம்படுத்தும் மைதானங்கள் நீளம் தாண்டுதலுக்கான மைதானம் மற்றும் கயிறு ஏறும் பயிற்சி பெறுவதற்கான வசதிகள் உள்ள மைதானத்தை எலும்பு மூட்டு சிறப்பு மருத்துவர் தர்மராஜ் திறந்து வைத்தார். திரளான பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு நீளம் தாண்டுதல் கயிறு ஏறுதல் உள்ளிட்ட பயிற்சிகளை திறம்பட செய்தனர். வந்திருந்த அனைவருக்கும் பிரசாதங்கள் காலை மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தோரணமலையில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சியை மேம்படுத்த ஆ.செண்பகராமன் திட்டமிட்டுள்ளார். தோரணமலையில் உள்ள நூலகத்தில் பல்வேறு பயிற்சி புத்தகங்களை வாங்கி வைத்துள்ளார். பயிற்சிக்கு வரும் மாணவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் அவர்கள் இங்கு மதிய உணவு உண்டு படித்துவிட்டு செல்லலாம்.
மேலும் இந்த மாணவர்களுக்கு ஆர்வமுள்ள பயற்சியாளர்கள் வந்து பாடம் எடுக்கலாம். ஓய்வு பெற்ற அதிகாரிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வரவேண்டும் என்று செண்பகராம் அழைக்கிறார். அவர்கள் எப்படியெல்லாம் படித்தால் வேலைவாப்பை பெற்றலாம் என்று சொல்லிக்கொடுத்தால் ஏழை மாணவர்கள் பயன்பெறுவர்கள். அப்படி கற்றுக் கொடுக்க வரும் சான்றோர்களுக்கு உணவு, தங்கும் இடம் கோவிலில் வழங்க தயாராக இருப்பதாக செண்பகராமன் தெரிவித்தார்.