June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பொன்முடி அழைத்துச் செல்லப்பட்டார்

1 min read

Ponmudi was taken to the Enforcement Directorate office

17.7.2023
அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் அமைச்சர் பொன்முடி
13 மணி நேர சோதனைக்கு பின் அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்

அமலாக்கத்துறை சோதனை

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். அதுமட்டுமின்றி சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் பொன்முடிக்கு தொடர்புடைய வீடு, அலுவலகம், அவருக்கு சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது. சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இருந்து 70 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 70 லட்ச ரூபாய் பணத்துடன், அமெரிக்க டாலர் உள்பட 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகையும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், 13 மணி நேர சோதனைக்கு பின் அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். பொன்முடியை அவரது வீட்டில் இருந்து அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடி அவரது மகன் அசோக் இருவரும் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அமைச்சர் பொன்முடி அவரது காரில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.