தென்காசி மாரத்தான் போட்டி 5 வயது இரட்டையர்கள் சாதனை- கலெக்டர் பாராட்டு
1 min read
TENKASI MARATHON COMPETITION 5 YEAR OLD TWINS ACHIEVEMENT- COLLECTOR’S APPRECIATION
17.7.2023
தென்காசி பட்டாளம் தென்காசி மாவட்ட இராணுவ வீரர்கள் நடத்திய மாரத்தான் போட்டியில் சாதனை படைத்துள்ள 5 வயதுடைய இரட்டையர்களுக்இ தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் மற்றும் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் சாம்சன் ஆகியோர் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.
தென்காசி பட்டாளம் தென்காசி மாவட்ட இராணுவ வீரர்கள் நடத்திய மாரத்தான் போட்டியில் 1680 நபர்கள் கலந்து கொண்டனர். அதில் இலத்தூர் ஸ்ரீ ராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல் வகுப்பில் படிக்கும் மாணவர்கள், முன்னாள் இராணுவ வீரரும், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் சேர்மனும், முன்னாள் சீவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவரும், ஜெய் பாக்யா அதிபருமான சீவநல்லூர் சட்டநாதனின் பேரன்கள் 5 வயதுடைய இரட்டையர்கள் புகழ்சட்டநாதன் மற்றும் மகிழ் சைலேந்திரன் இருவரும் சாதனை புரிந்துள்ளனர்.
மேலும் இதே பள்ளியைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியை பொன்னம்மாள் மாநில அளவில் மூத்தோர் தடகளப் போட்டிகளில் 1500 மீட்டரில் தங்கம், 800 மீட்டரில் தங்கம், 400 மீட்டரில் வெள்ளி பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் மாரத்தான் போட்டியில் சாதனை படைத்த 5 வயது இரட்டையர்கள் புகழ்சட்டநாதன், மற்றும் மகிழ் சைலேந்திரன் மற்றும் தகடகங்களை போட்டியில் சாதனை படைத்துள்ள உடற்கல்வி ஆசிரியை பொன்னம்மாள் ஆகியோருக்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துறை இரவிச்சந்திரன் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்தார்.
மேலும் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் சாம்சன், தென்காசி பட்டாளம் இராணுவ வீரர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் என்.ஆர்.மணி, தலைவர் ராம்குமார், செயலாளர் முருகன், துணைச் செயலாளர் ரஞ்சித், பொருளாளர் சங்கர், இலத்தூர் ஸ்ரீராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சிவகுமாரி, பள்ளியின் முதல்வர் செய்யது, துணை முதல்வர் கௌரி, மற்றும் ராணுவ வீரர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், சமூக நல ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.