தென்காசியில் ரூ. 6 லட்சம் செலவில் குடிநீர் தொட்டி
1 min read
Tenkasi Rs. Drinking water tank at a cost of 6 lakhs
17.7.2023
தென்காசி கீழ்பகுதி திருவள்ளுவர் சமுதாய மக்கள் வாழும் 23 வது வார்டு முப்புடாதி அம்மன் கோவில் தெரு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் நீர்த்தேக்க தொட்டி 6 லட்சம் மதிப்பீட்டில் ஆள் துளை கிணறு மேல்நிலை நீர் தீர்க்க தொட்டி கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி நகராட்சி சேர்மன் ஆர்.சாதிர் தலைமை வகித்து குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை திறந்து வைத்தார்.நகராட்சி துணை சேர்மன்கேஎன்எல்.சுப்பையாதென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், 23 வது வார்டு கவுன்சிலர் சுனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், பொறியாளர் கண்ணன், கவுன்சிலர்கள் பூமாதேவி, ரபிக், சுப்பிரமணியன்,
தென்காசி நகர திமுக பொருளாளர் அ.ஷேக்பரீத், மாவட்ட திமுக பொறியாளர் அணி தலைவர் கீழப்புலியூர் சே.தங்கப்பாண்டியன்,
சன் ராஜா, ராஜேந்திரன், மைதீன் தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக அவைத் தலைவர் என்.வெங்கடேஸ் வரன், தென்காசி நகர மதிமுக செயலாளர் ஜி.கார்த்திக், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஏஜிஎம். கணேசன், நகர காங்கிரஸ் பொருளாளர் ஈஸ்வரன், துணைத் தலைவர் தேவராஜன், பிரேம் குமார், தென்காசி மாவட்ட சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் என்.கணேசன்,திருவள்ளுவர் சமுதாய நிர்வாகிகள் சுப்பையா, சுதர்சன், ராமச்சந்திரன், சிதம்பர ராஜா, ராமலிங்கம், துரை, கிருஷ்ணமூர்த்தி, ரவி குமார், சபரி கணேஷ், மகாகாளிதாஸ், விவேக் ராஜா, விக்னேஷ், வெங்கடேஷ், செல்வநாயகம் அரவிந்த் ஜோதிடர், சுரேஷ் கோபி கவாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் காங்கிரஸ் நகர தலைவர் மாடசாமி ஜோதிடர் அனைவருக்கும் நன்றி கூறினார்.