செல்போன் வெடித்ததால் விமானம் அவசரமாக தரையிறக்கம்
1 min read
Flight makes emergency landing after cell phone explodes
18.7.2023
ராஜஸ்தானில் இருந்து டெல்லி புறப்பட்டபோது
செல்போன் வெடித்ததால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
செல்போன்
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் இருந்து ஏர்இந்தியா விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. விமானம் புறப்படும் போது பயணி ஒருவரின் செல்போன் திடீரென வெடித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் புகை வந்ததை தொடர்ந்து விமானி விமானத்தை அவசரமாக தரை இறக்கினார்.
அந்த விமானத்தில் மொத்தம் 140 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் விமானம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு அனைத்தையும் சீரானதும் டெல்லிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. அவசரமாக தரை இறக்கப்பட்ட அந்த விமானம் 1 மணி நேரத்துக்குள் உதய்ப்பூரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.
கடந்த ஜூன் 21-ந் தேதி டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டோராடூனுக்கு புறப்பட்ட உடனேயே இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரை இறக்கப்பட்டது. அதை சரி செய்த பிறகு விமானம் புறப்பட்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.