45 ஆண்டுகளுக்கு பிறகு யமுனை ஆற்றின் வெள்ளம் தாஜ்மகாலுக்குள் புகுந்தது
1 min read
After 45 years the flood of Yamuna river entered the Taj Mahal
19.7.2023
யமுனை ஆற்றின் இரு கரைகளையும் தாண்டி வெள்ள நீர் செல்வதால் அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. தாஜ்மகால் வளாகத்தில் அமைந்துள்ள பூங்காவை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது.
மழை
டெல்லியில் பலத்த மழை பெய்ததால் யமுனை ஆற்றில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணையின் நீர்மட்டம் 206.01 மீட்டராக அதிகரித்துள்ளது. யமுனை ஆற்றின் இரு கரைகளையும் தாண்டி வெள்ள நீர் செல்வதால் அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதற்கிடையே 45 ஆண்டுகளுக்கு பிறகு யமுனை ஆற்றின் வெள்ளம் தாஜ்மகாலுக்குள் புகுந்தது. தாஜ்மகால் வளாகத்தில் அமைந்துள்ள பூங்காவை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது. தாஜ்மகால் சுவரை தொட்டுக் கொண்டும் வெள்ள நீர் செல்கிறது.