June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

1 min read

Increase in water flow in Courtalam falls

19.7.2023
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெய்து வரும் சாரல் மழையினால் அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி களில் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது..

குற்றாலத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் தாமதமாக ஜூன் இறுதியில் தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குறைவான அளவில் விழுந்து வந்த நிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி புலியருவி சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

நேற்று காலையில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குறைவாக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலையில் பெய்த சாரல் மழையினால் இன்று குற்றாலம் மெயின் அருவி
பழைய குற்றாலம் அருவி. புலியருவி சிற்றருவி உள்ளிட்ட அருவிகளிலும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது இதனால் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக உற்சாகத்துடன் குளித்து வருகின்றனர்.

மேலும் குற்றாலத்தில் சாரல் மழை விட்டு விட்டு பெய்கிறது. மேலும் குளிர்ந்த காற்றும் மெல்லிய சாரலும் குற்றாலத்தில் குளு குளு சூழலை ஏற்படுத்தியுள்ளது.

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் ஆனந்தமாக குளித்து மகிழவும், குளிர்ந்த காற்றுடன் அடித்து வரும் மெல்லிய சாரலில் நனையவும், குளு குளு சூழ்நிலையை அனுபவிக்கவும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கூட்டமாக குற்றாலத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.