தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் ரூ.2.44 கோடிக்கு தீர்மானம்
1 min read
Tenkasi district panchayat committee meeting resolution for Rs.2.44 crore
22.7.2023
தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ் செல்வி தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ஆயிரப்பேரி தி. உதயகிருஷ் ணன். ஊராட்சி செயலாளர் ருக்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கனிமொழி, சாக்ரடீஸ், பூங்கொடி.பி.சுதா, சி.சுதா, மதிமாரிமுத்து, சுப்பிரமணியன். ராஜா தலைவர், மைதீன் பீவி, தேவி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட
தென்காசி ஊராட்சி ஒன்றியம், குத்துக்கல் வலசை ஊராட்சி வர்த்தகம் நகரில் தார்ச்சாலை அமைத்தல், மத்தளம்பாறை ஊராட்சி கோகுலம் காலனியில் தார் சாலை அமைத்தல், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், சிவலார்குளம் ஊராட்சி, முத்தம்மாள் புரம் ஊராட்சி, வடக்கு காவலாகுறிச்சி ஊராட் சிகளில் சாலை அமைத் தல், கடையம் ஊராட்சி ஒன்றியம், குத்தப்பாஞ் சாங்குளம் ஊராட்சி, கடையம் பெரும்பத்து ஊராட்சி, வீராசமுத்திரம் ஊராட்சி, சேர்வைக்காரன்பட்டி ஊராட்சி, கீழ ஆம்பூர் ஊராட்சிகளில் சிமெண்ட் சாலை,வாறுகால் அமைத் தல், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், பெத்தநாடார்பட்டி ஊராட்சி செல்லதாயார் புரம் அம்மன் கோயிலில் இருந்து ஊரின் மேற்கு வரை வாறுகால் அமைத்தல், ராஜகோ பாலபுரி ஊராட்சி அதி சயபுரம் மேற்கு பகுதியில் எரிமேடை அமைத்தல், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கம்பனேரி ஊராட்சி வலசையில் பேவர் பிளாக் சாலை அமைத்தல். குருவிகுளம் யூனியனில் புளியங்குளம் ஊராட்சி பயணிகள் நிழற்குடை அமைத்தல், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம், கரிவலம் வந்தநல்லூர் ஊராட்சி பெருமாள் கோவில் 1வது தெருவில் வாறு கால் சிமெண்ட் சாலை அமைத்தல், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், நாராயணபுரம் ஊராட்சி அருந்ததியர் குறுக்கு தெரு வில் தார் சாலை அமைத் தல்உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் ரூ.244.28 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணி களுக்கு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
முன்னதாக கூட்டம் துவங்கியவுடன் மாவட்ட கவுன்சிலர் கனிமொழி, சாக்ரடீஸ் ஆகியோர் தங்க ளது வார்டுகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது