பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் தூய்மைப்பணி
1 min read
Cleaning work at Bhavoorchatram railway station
23.7.2023
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண் தான விழிப்புணர்குழு மற்றும் ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவியர் இணைந்து பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவர் லட்சுமி சேகர் தலைமை வகித்தார். சங்க நிர்வாகி முனைவர் த. அருணாச்சலம், முன்னாள் செயலர் ரஜினி, முன்னாள் பொருளாளர் பரமசிவன் முன்னிலை வகித்தனர்.
ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி தாளாளர் ஆ. எழில்வாணன் தொடங்கி வைத்தார். வட்டாரத் தலைவர் கே.ஆர்.பி.இளங்கோ கண் தான விழிப்புணர்வு குறித்து பேசினார்.
கல்லூரணி ஊராட்சித்தலைவர் ராஜ்குமார், மாவட்ட ஊராட்சிக்கு ழு உறுப்பினர் இரா. சாக்ரடீஸ் வாழ்த்தி பேசினர். மேலும் முன்னாள் தலைவர் கௌதமன், முன்னாள் செயலர் ஆனந்த்,சுப்புராஜ்,ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.துணைச் செயலார் தங்கராஜ் தொகுப்புரை ஆற்றினார். பொருளாளர் சிநேகா பாரதி நன்றி கூறினார்