June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தேஜஸ் ரெயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும்

1 min read

Tejas train will now stop at Tambaram

2.8.2023
எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய ரெயில் தாம்பரத்தில் நிரந்தரமாக நின்று செல்ல கோரிக்கை. சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரெயில் இனி தாம்பரம் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தேஜஸ் ரெயில்

சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரெயில் வரும் ஆகஸ்டு 26ம் தேதி வரை மட்டுமே தாம்பரத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய ரெயில் தாம்பரத்தில் நிரந்தரமாக நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், தேஜஸ் விரைவு ரெயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், வரும் ஆகஸ்டு 26ம் தேதி வரை மட்டுமே தாம்பரத்தில் நின்று செல்லும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தொடர்ந்து நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.