June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆவுடையானூரில் மனுநீதிநாள் முகாம்- தென்காசி எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

1 min read

Manu Nithinal camp at Audaiyanur- Tenkasi MLA, District Collector participation

10.8.2023
தென்காசி மாவட்டம்,ஆவுடையானூரில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன், பழனி நாடார் எம்எல்ஏ கலந்து கொண்டனர்.

மனுநீதிநாள் முகாம்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள்முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், கீழப்பாவூர் ஒன்றியக்குழு தலைவர் சீ.காவேரிசீனித்துரை முன்னிலை வகித்தனர். இம்முகாமில் 96 பயனாளிகளுக்கு, ரூ.13,53,851 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் பேசினார்.

இம்முகாமில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையினர் நலத்துறை அலுவலர் சங்கரநாராயணன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி, துணை ஆட்சியர் (பயிற்சி) கவிதா, மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, தென்காசி வட்டாட்சியர் சுப்பையன், வட்டாட்சியர் (சமூக பாதுகாப|பு திட|டம|) சண்முகம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் இராம.உதயசூரியன், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், மேரிமாதவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கோபி (எ) குத்தாலிங்கராஜன், தினேஷ்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்டராஜா, காங்கிரஸ் வட்டார தலைவர் குமார்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.