பூலித்தேவன் 308 வது பிறந்த நாள் விழா- அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
1 min read
Bhoolithevan 308th birthday celebration- Ministers garlanded and honoured
2.9.2023
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரின் 308 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நெற்கட்டும் செவலில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும்செவல் கிராமத்தில் மாமன்னர் பூலித்தேவர் நினைவு மாளிகை உள்ளது. இங்கு ஆண்டு தோறும் செப்டம்பர் 1-ந் தேதி தமிழக அரசு சார்பில் அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், தென்காசி மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன், தென்காசி வடக்கு மாவட்ட
திமுக செயலாளர் வழக்கறிஞர் ஈ.ராஜா எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன், தென்காசி எம்.பி. தனுஷ் குமார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார், முன்னாள் மாவட்ட செயலாளர் மா.செல்லத்துரை,
வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன்.முத்தையா பாண்டியன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் யு எஸ் டி.சீனிவாசன், நகர் மன்ற தலைவர்கள் புளியங்குடி விஜயா சௌந்தர பாண்டியன், கடையநல்லூர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான்
தென்காசி மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் தமிழ்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சிகுழு துணை தலைவர் ஆயிரப்பேரி தி. உதயகிருஷ் ணன், நெற்கட்டும்செவல் ஊராட்சி மன்றதலைவர் பாண்டியராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு மாமன்னர் பூலித்தேவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும், சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் நினைவுமண்டபத்தினை பார்வையிட்டு, பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.
இவ்விழாவில், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மாமன்னர் பூலித்தேவரின் வாரிசான கோமதி முத்துராணி துரைச்சி தலைமையில் பூலித்தேவரின் குலதெய்வமான உள்ளமுடையார் சாஸ்தா கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாமன்னர் பூலித்தேவர் சிலைக்கு அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கோமதி முத்துராணிதுரைச்சி, அவரது கணவர் பாண்டியராஜா, மூத்த மகன் சிவக்குமாரசாமிதுரை, இளைய மகன் வழக்கறிஞர் சிபி உள்ளமுடையார் துரை மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்கள் 1000 பேருக்கு இலவச சேலைகளும் 5000 பேர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.