June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு

1 min read

Flooding in Indaruvi

2.9.2023
குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக நேற்று இரவு ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று காலையில் சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவியில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.
.
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் பெய்த பலத்த மழை காரணமாக ஐந்தருவியில் இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஐந்தருவியில் மரக்கிளைகள், கற்கள் வந்து விழுந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது . காலையில் வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஐந்தருவியில் தண்ணீர் வரத்து தாராளமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர் .மேலும் சனி ஞாயிறு விடுமுறை என்பதால் குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.