ஜனாதிபதி வழங்கும் பிரமாண்டமான சிறப்பு விருந்து-மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
1 min read
A grand special dinner hosted by the President-with the participation of M.K.Stalin
8.9.2023
டெல்லியில் ஜி-20 உச்சி மாநாட்டுக்காக வந்திருக்கும் உலக தலைவர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு சார்பில் இந்த விருந்து நாளை இரவு வழங்கப்படுகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரத் மண்டப வளாகத்தில் விருந்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விருந்தில் கலந்து கொள்ள வருமாறு மாநில முதல்-மந்திரிகள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டு தூதர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர்கள் மன்மோகன்சிங், தேவேகவுடா ஆகியோருக்கு சிறப்பு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இது காங்கிரசாரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
மு.க.ஸ்டாலின்
இந்த நிலையில் விருந்தில் பங்கேற்க இயலாது என்று மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். மாநில முதல்-மந்திரிகளில் மு.க.ஸ்டாலின், மம்தாபானர்ஜி, கெஜ்ரிவால் ஆகியோர் விருந்தில் பங்கேற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொழில் அதிபர்களில் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி உள்பட பிரபலங்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.