டெல்லி ஜி20 உச்சி மாநாடு நிறைவடைந்தது
1 min read
Delhi G20 summit concluded
20.9.2023
டெல்லியில் இரண்டு நாட்களாக நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு நிறைவடைந்ததாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அடுத்த வருடம் பிரேசில் டி20 மாநாட்டை நடத்த இருக்கிறது. இதற்கான தலைமையை பிரதமர் மோடி, பிரேசில் அதிபரிடம் ஒப்படைத்தார்.
டிசம்பர் 1-ம்தேதி முதல் ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை பிரேசில் ஏற்க உள்ளது. அதனைத் தொடர்ந்து ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்களுக்கு பிரேசில் அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா சார்பில் வருகிற நவம்பரில் மற்றும் ஒரு ஜி20 மாநாடு காணொலி வாயிலாக நடைபெறும் என பிரதமர் மோடி அறவித்துள்ளார்.