தோரணமலை அறங்காவலர் கே.ஆதிநாராயணன் குடும்பம் சார்பில் கிராம மக்களுக்கு விளையாட்டு மைதானம்-மாலை நேர வகுப்பு
1 min read
Playground for Villagers-Evening Class by Thoranamalai Trustee K.Athinarayanan Family
தென்காசி, செப்.10-
தோரணமலை பரம்பரை அறங்காவலர் கே.ஆதிநாராயணன் குடும்பத்தார் சார்பில் கிராம மக்களுக்கு விளையாட்டு மைதானம்-மாலை நேர வகுப்பை டாக்டர் தர்மராஜ் திறந்து வைத்தார்.
தோரணமலை
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற தோரணமலை முருகன் கோவில் உள்ளது. அகத்தியர், தேரையர் வாசம் செய்த ஸ்தலம் இது. இங்கு தினமும் மதியம் அன்னதானம் நடக்கிறது. மேலும் தமிழ்மாத கடைசி வெள்ளி, பவுர்ணமி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
இதுதவிர மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவில் சார்பாக அறப்பணியும் நடந்து வருகிறது. வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் கோவிலில்உள்ளது.
கோவில் பரம்பரை அறங்காவலராக இருந்த கே.ஆதிநாராயணன் அவர்களின் குடும்ப வீடு முத்துமாலை புரம் என்ற கிராமத்தில் உள்ளது. அந்த வீட்டை அந்த ஊர் மாணவர்கள் படிக்க மாலைநேர வகுப்பு நடத்த ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் ஊர் இளைஞர்களுக்காக விளையாட்டு அமைதானம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.
இவைகளின் திறப்பு விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடந்து. இவைகளை எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் தர்மராஜ் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் தாசில்தார் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் துணை தாசில்தார் அய்யனார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, எல்.ஐ.சி. தமிழ்செல்வன், சென்னை திருமலைக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்தவர்களை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் வரவேற்று நன்றி கூறினார்.
விழாவையொட்டி மாணவ-மாணவிகளின் சிலம்பம் நிகழ்ச்சி நடந்தது. மாஸ்டர்கள் சிலம்பம் பாப்பையா, கணபதி ஆசான் ஆகியோரும் கலந்துகொண்டு சிலம்பம், களறி ஆடினார்கள். மாணவிகள் அமுதா, உதயதாரா ஆகியோரின் சிலம்பம் அனைவரையும் கவர்ந்தது.