இந்திய கலாசாரத்தை உலகமே கொண்டாடி வருகிறது-மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
1 min read
The world is celebrating Indian culture- PM Modi is proud of Mann Ki Baat
24.9.2023
இந்திய கலாசாரத்தை உலகமே கொண்டாடி வருவதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார்.
மன் கி பாத்
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி 104-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். இந்நிலையில், இன்று 105வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடம் பல நூற்றாண்டுகளுக்கு உலக வர்த்தகத்தின் அடிப்படையாக இருக்கும். ஆப்பிரிக்க யூனியனை ஜி20-ல் உறுப்பினராக்குவதில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் தலைமை உலகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
ஜி20 மாநாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்பட்டன. ஜி20 மாநாடு இந்திய சுற்றுலா துறைக்கு உற்சாகம் அளித்துள்ளது. பாரம்பரிய தலங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்திய கலாசாரத்தை உலகமே கொண்டாடி வருகிறது.
உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் குழந்தைகளுக்காக தனித்துவமான நூலகத்தை இளைஞர்கள் ஆரம்பித்துள்ளனர். டிஜிட்டல் தொழில்நுட்ப காலகட்டத்திலும் புத்தகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகளை வாசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். பண்டிகை காலம் துவங்க உள்ள நேரத்தில் உள்ளூர் பொருட்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.