June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

சுரண்டையில் நண்பன் வெட்டிக்கொலை 3 பேர் கைது

1 min read

3 arrested for friend’s murder in Surandai

2.10.2023
தென்காசி அருகே சுரண்டையில் மளைவியை அபகரித்த நண்பனை கொலை செய்த வழக்கில் தொழிலாளி உள்பட 3 பேர் கைது செய் யப்பட்டனர்,

தென்காசி மாவட்டம் சாண்டை அருகே உள்ள துரைசாமியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சேர்மன், இவருடைய மகன் கோட்டைச் சாமி என்ற சுரேஷ் (வயது 30). லிவசாய தொழிலாளி. இவருடைய மனைவி அருணாதேவி (வயது 25),
சாம்பவர்வடகரையைச்
சேர்ந்த வைத்திலிங்கம் என்பவரது மகன் முத்துகுமார் (27), இவர்
கோட்டைச் சாமியின் நண்பர் பீடி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரும், சுரேசும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

இந்த நிலையில் முத்துகுமாருக்கும். சுரேஷின் மனைவி அருணாதேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.இதைய டுத்து அருணாதேவி. கணவர் சுரேஷை விட்டு பிரிந்து கள்ளக் காதலன் முத்துகுமாருடன்
சென்று விட்டார்.

இது பற்றி சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் செய்த போது விசாரணைக்கு வந்த அருணா தேவி நான் சுரேஷ் உடன் வாழ விரும்பவில்லை முத்துக்குமாருடன் செல்ல விரும்புகிறேன் என்று கூறி முத்துக்குமாரிடம் சென்று விட்டார்

பின்னர் இருவரும் சுரண்டை வாகுணராமபுரம் முஸ்லிம் பள்ளிவாசல் தெருவில் வாடகை வீட்டில் வசித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் அவருடைய தம்பி செல் வம் (வயது 29), நண்பரான தூத்துக் குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேகால்வாய் கிராமத்தைச் சேர்ந்த பண்டாரம் மகன் மூக்காண்டி (வயது 29) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் இரவில் சுரண்டை வரகுணராமபுரத் துக்கு சென்றனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த முத்துகுமார். அருணாதேவி ஆகியோரை வழிமறித்து அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த முத்துகுமார் பரிதாபமாக இறந்தார். இதனை தடுக்க முயன்ற போது அருணா தேவிக்கும் கையில் அறிவாள் வெட்டு விழுந்தது இதில் காயமடைந்த அருணாதேவி தென்காசி அரசு ஆஸ்பத்திரி யில்அனுமதிக்கப்பட்டு சிமிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கரண்டை போலிசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், செல்வம், மூக்காண்டி ஆகிய 3 பேரையும் நேற்றுகைது செய்தனர். கைதான சுரேஷ் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது-

என்னுடைய நண்பரான முத துகுமார். எனது மனைவி அருணாதேவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு எனது மனைவியை அபகரித்து எனக்கு துரோகம் செய் தார்.பின்னர் அவர்கள் தனியாக சென்று குடும்பம் நடத்தினர். இதுகுறித்து நாள் போலீசில் புகார் தெரிவித்தும், அருணா தேவி என்னுடன் சேர்ந்து வாழ மறுத்து,முத்துகுமாருடன் செல் வதாக கூறி என்னை அவதூறாக பேசினார். இதனால் என்னுடைய நம்பி செல்வம், நண்ப ரான மூக்காண்டி ஆகியோருடன் சேர்ந்து முத்துகுமாரை கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத் தில் கூறினார்.

அதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட சுரேஷ், செல்வம் , மூக்காண்டி, ஆகிய 3 பேரையும் போலீசார் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங் கோட்டை மத்திய
சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.