தென்காசியில் முதலமைச்சர் நிவாரணநிதிக்கு பணம் அனுப்பிய மகளிர்
1 min read
Women sent money to Chief Minister’s Relief Fund in Tenkasi
4.10.2023
தென்காசி நகராட்சி பகுதியில் வசித்துவரும் பெண்கள் நேற்று தென்காசி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் ஆர்.சாதிரை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் தனக்கு வழங்கப்படும் அனைத்து அரசு சலுகைகள் மற்றும் தற்போது தமிழ்நாடு அரசினால் 45 மாதகாலம் மாதந்தோறும் வழங்கப்படும் மொத்த மதிப்பூதியத் தொகை ரூ.8.75.000/- ரூபாய் ஆறு எட்சத்து எழுபத்து ஐந்தாயிரத்தினை “முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியது பொதுமக்களாகிய நாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறோம். பராட்டுகின்றோம். அதனை தொடர்ந்து.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள மகத்தான திட்டமான குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை எங்களுக்கு கிடைக்கச் செய்த தமிழக முதல்வருக்கும். கலைஞர் மகளிர் உரிமைத் தெகை கிடைக்கப் பெறாமல் இருந்த பல மகளிர்கள் தென்காசி நகரத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்திந்து மனு கொடுத்த உடன் 24 மணிநேரத்தில் உரிமைத் தொகை வராத மகளிருக்கு உடனடியாக கிடைக்க செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தென்காசி நகர திமுக செயலாளர் ஆர்.சாதிர் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் எங்களுக்கு கிடைக்கப் பெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை யிலிருந்து தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்ல பல காரியங்களுக்கு பயன்படும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நாங்கள் மகிழ்ச்சியோடு மனமுவந்து எங்களது பங்களிப்பாக சிறு தொகையினை வழங்கு கின்றோம்.என்று கூறினார்கள்.
அதனைத்தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியுடன் பணம் அனுப்பிவைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகர திமுக பொருளாளர் அ.ஷேக்பரீத், மாவட்ட பொறியாளர் அணித்தலைவர் சே.தங்கப்பாண்டியன் முன்னாள் அறங்காவலர் அருணாச்சலம் ,
மாணவரணி மைதீன், தம்பிராஜன்,.ராஜன்,
இளைஞரணி முரளி, மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.