பாவூர்சத்திரத்தில் சமுதாய வளைகாப்பு விழா
1 min read
Community baby shower at Bhavoorchatra
6.10.2023
தென்காசி மாவட்டம்,
பாவூர்சத்திரத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தென்காசி எம்எல்ஏ எஸ்.பழனிநாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை
வே.ஜெயபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சித்தலைவர் தமிழ்செல்விபோஸ், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரிசீனித்துரை, மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் இரா.சாக்ரடீஸ் முன்னிலை வகித்தனர்.
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மங்களநாயகி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார், தென்காசி
தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 120க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகளை வழங்கி வாழ்த்தி பேசினார்கள்.
அதனைத்தொடர்ந்து சிறந்த அங்கன்வாடி பணியாளர், உதவியாளர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது. முன்னதாக கர்ப்பிணி பெண்களுக்கு முருங்கை சூப், அவல் லட்டு, கொழுக்கட்டை மற்றும் சத்தான உணவுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் எஸ்.ஐ. சண்முகதங்கவேல், வட்டார ஒருங்கிணைப்பாளர் வினாயகச்செல்வி, மேற்பார்வையாளர்கள் குழந்தை கிரேஸ், தேன்மொழி, தெய்வானை, மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், ஆய்க்குடி பேரூராட்சி தலைவர் சுந்தர்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜ்குமார், சொள்ளமுத்து மருதையா, முத்து மாலையம்மாள் மதிச்செல்வன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், விஜயன், வட்டார காங்கிரஸ் தலைவர் குமார்பாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்டராஜா, முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்.அறிவழகன், முன்னாள் துணைத்தலைவர் தங்கச்சாமி, தங்கேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.