ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடிக்கு காவல்துறையின் தவறான கையாளுதலே காரணம்- நீதிபதி அதிருப்தி
1 min read
Police mishandling was the reason for AR Raghuman concert mess- Judge disapproves
6.10.2023
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியின்போது போலி டிக்கெட்கள் மூலமாக ரசிகர்கள் குவிந்து குழறுபடி ஏற்பட்டது போல் இல்லாமல் லியோ பட இசை நிகழ்ச்சியின்போது கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியதாகவும் இதனையடுத்து தாமாகவே பட தயாரிப்பு நிறுவனம் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாகவும் காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
லியோ’ திரைப்பட டிரைலர் வெளியிட்ட போது ரோகினி திரையரங்கம் சேதப்படுத்தப்பட்டதற்கும் , ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பு உள்ளிட்ட குளறுபடிகள் ஏற்பட்டதற்கு காவல்துறையினரின் தவறான கையாளுதலே காரணம் எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
இதுகுறித்து ஆஜராகி விளக்கமளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, லியோ டிரைலரை ரோகினி திரையரங்குக்கு வெளியில் திரையிடுவது தொடர்பாக அனுமதி கோரி எந்த விண்ணப்பமும் அளிக்கப்படவில்லை எனவும், அனுமதி கோரியிருந்தால் பரிசீலிக்கப்பட்டிருக்கும் என விளக்கமளித்தார்.
திரையரங்குக்கு உள்ளே லியோ டிரைலர் திரையிட எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை எனக் குறிப்பிட்டார்.
மேலும், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியின் போது போலி டிக்கெட்கள் மூலமாக ரசிகர்கள் குவிந்து விடாமல் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியதால், அந்த நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்களே ரத்து செய்து விட்டதாகவும், அதற்கும் காவல் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், தற்போது அனுமதி கோரினால், பரிசீலிக்கத் தயார் எனவும் தெரிவித்தார்.
திரையரங்கில் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை எனவும், புகார் இல்லாமல் நடவடிக்கை எடுத்தால் விஜய் ரசிகர்களுக்கு எதிராக செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் காவல் துறையை பொறுத்தவரை எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி மறுப்பதில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.
அதற்கு நீதிபதி, சட்டம் – ஒழுங்கு பிரச்னையை பற்றித் தான் நீதிமன்றம் கவலை தெரிவித்ததாகவும், பத்திரிகையில் செய்தி வெளியானதால் இதுகுறித்து கேள்வி எழுப்பியதாகவும் கூறினார்.